படிக்க வந்த 15 வயது மாணவியை படுக்கைக்கு அழைத்த 59 வயது மின்வாரிய அதிகாரி : அதிர்ச்சி சம்பவம்!!!
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை இ .பி. காலனி பகுதியை சேர்ந்தவர் 59 வயதான கந்தசாமி. இவர் நிலக்கோட்டை மின் வாரிய அலுவலகத்தில் மேற்பார்வையாளராக பணியாற்றி வருகிறார்
இவரது வீட்டில் தனது உறவினரின் 15 வயது மகள் தங்கி படித்து வருகிறார். இந்நிலையில் கடந்த 18 ஆம் தேதி இரவு கந்தசாமி மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரனிடம் சிறுமி புகார் அளித்துள்ளார் .
புகார் குறித்து உரிய விசாரணை நடத்துவதற்கு நிலக்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பேபிக்கு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவிட்டதன் பெயரில் ஆய்வாளர் பேபி கந்தசாமியின் வீட்டிற்கு நேரடியாக சென்று விசாரணையில் ஈடுபட்டார்.
விசாரணையில் மின்வாரிய மேற்பார்வையாளர் கந்தசாமி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நிலக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
15 வயது மாணவியை 59 வயது மின்வாரிய மேற்பார்வையாளர் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்று போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட சம்பவம் இப்பகுதியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.