Categories: தமிழகம்

கோவையில் ரூ.590 கோடி செலவில் பாதாள சாக்கடை..செய்யாத பணியை செய்ததாக கூறிய அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு : அமைச்சர் கே.என். நேரு!!

மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்துள்ளார்.

கோவையில் மாநகராட்சி அலுவலகத்தில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் 5.59கோடி மதிப்பீட்டில் 9முடிவுற்ற பணிகள் திறப்பு விழா மற்றும் 49.62 கோடி மதிப்பீட்டில் 263 புதிய திட்டங்கள் துவக்க விழா,சாதனை நிகழ்வு புகைப்பட கண்காட்சி, உள்ளிட்டவையினை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் மின்சார துறை அமைச்சர் செந்தில் பாலாஜி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் நேரு, மாநகராட்சியில் இந்த ஆண்டு புதிய திட்டங்கள் ரூ.24 ஆயிரம் கோடி செலவில் துவங்கப்பட்டுள்ளது எனவும் கோவை மாநகராட்சிக்கு ரூ.590 கோடி பாதாள சாக்கடை திட்டம் திட்டமிடப்பட்டுள்ளது.

அதே போல பில்லூர் குடிநீர் திட்டம் ரூ.780 கோடி செலவில் ஒரு வருடத்தில் நிறைவடையவுள்ளது என தெரிவித்தார். ஸ்மார்ட் சிட்டி திட்டம் மந்தமாக உள்ளது என்றார்கள். அதை இன்று பார்வையிட்டோம் என தெரிவித்த அவர் சிறுவாணி அணை தொடர்பாக கலைஞர் காலத்தில் போடப்பட்ட ஒப்பந்தப்படி தண்ணீர் தரவில்லை இது குறித்து தமிழக முதல்வர் கேரள முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும், கடிதத்திற்கு இன்னும் பதில் சொல்லவில்லை என தெரிவித்த அவர் இனி அதிகாரிகளை அனுப்பி பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் பெரும் முயற்சி எடுக்கப்படும் என தெரிவித்தார்.

மாநகராட்சியில் செய்யாத பணிகள் செய்ததாக முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் மற்றும் காண்ட்ராக்டர் பெயரில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதைப்போல ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகளில் முறைகேடுகள் உள்ளதா என்பதை அதிகாரி நியமிக்கப்பட்டு ஆய்வு செய்து வருகின்றனர். அறிக்கை இன்னும் வரவில்லை. எங்கு தவறு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

கோவை மாநகராட்சியில் ஐந்து முக்கியமான சாலைகளை இணைக்கும் விதமாக 145 கோடி திட்டம் துவங்கப்பட உள்ளது. கோவை மதுரை சென்னை போன்ற இடங்களிலும் குப்பையில் இருந்து மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்பட உள்ளது. அதற்கான பணி தொடர்பாக ஹைதராபாத்தில் சென்று அதிகாரிகள் பார்த்து வந்துள்ளனர் என தெரிவித்தார்.கோவை வெள்ளலூர் குப்பை கிடங்கில் மின்சாரம் தயாரிக்கும் பணி துவங்கப்படும் எனவும் அதேபோல குப்பையை மறு சுழற்சி செய்கிறோம் என தெரிவித்தார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

1 day ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

1 day ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

1 day ago

This website uses cookies.