பெங்களூரிலிருந்து தங்கத்தை வாங்கி கொண்டு காரில் வந்து கொண்டிருந்த நகை வியாபாரியை மடக்கி, காருடன் 5 கிலோ தங்கத்தை மர்மநபர்கள் கடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராஜவீதியில் பிரசன்னா (40) என்பவர் நகைக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நகை கடைக்கு தேவையான 5 கிலோ எடையுள்ள பல்வேறு புதிய நகைகளை வாங்கிக் கொண்டு கார் மூலம் நேற்று இரவு பெங்களூரில் இருந்து காரில் கோவை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவருடன் கடை பணியாளர்கள் விஜயகுமார் (46), சுரேஷ்குமார் (45), ஜெய்சன் (40) ஆகியோர் இருந்தனர்.
இந்நிலையில், காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி ஆற்று மேம்பாலம் அருகே பூலாம்பட்டி என்ற இடத்தில் கார் சென்று கொண்டிருந்தபோது, பின்னால் 2 கார்களில் வந்த மர்ம நபர்கள், பிரசன்னா வந்த காரை வழிமறித்து காரின் சைடு கண்ணாடிகளை உடைத்து நொறுக்கி, அவர்கள் எடுத்து வந்த ஐந்து கிலோ நகைகள் மற்றும் பிரசன்னா வந்த ஈட்டியோஸ் காரையும் கடத்தி சென்றனர்.
இதுகுறித்து காரிமங்கலம் காவல் நிலையத்தில் பிரசன்னா அளித்த புகாரின் பேரில் மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில் விசாரணை நடத்தி வருகிறார். மேலும், கொள்ளை சம்பவம் நடந்த இடத்தில் சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ் குமார் தாகூர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும், கொள்ளச் சம்பவம் இந்த இடத்திலிருந்து கொள்ளையர்கள் பயன்படுத்திய இரும்பு கம்பி செல்போன் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இது குறித்து சேலம் சரக டிஐஜி ராஜேஸ்வரி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று, வழக்கு தொடர்பாக கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு காரில் தங்கத்தை எடு்த்து வந்த நான்கு பேரின் கைரேகை பதிவுகளை சேகரித்துள்ளனர்.
இது தவிர கொள்ளையர்கள் விட்டு சென்றதாக கூறப்படும் செல்போன் ஒன்று எங்கே இருக்கிறது, அது யாருடையது என்பதும் குறித்தும், கொள்ளை சம்பவம் தொடர்பாக ஏதாவது சிசிடிவி.பதிவுகள் கிடைக்கிறதா எனவும் போலீசார் விசாரணையி்ல் ஈடுபட்டு வருகின்றனர்.
கொள்ளை சம்பவத்தில் தங்கத்தை காரில் கொண்டு வந்தவர்களுக்கும், கொள்ளையர்களுக்கும் ஏதாவது தொடர்பு இருக்குமா என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை நடந்து வருகிறது.
தருமபுரி அருகே நள்ளிரவே நேரத்தில் நடந்து முடிந்துள்ள இந்த கொள்ளை சம்பவம் பரபரபபை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.