தமிழகம்

பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சிறுவன் சடலமாக மீட்பு.. பின்னணி என்ன?

கோவில்பட்டியில் காணாமல் போன சிறுவன் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகர் பகுதியில் தம்பதி வசித்து வருகின்றனர். கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் 7ஆம் வகுப்பும், இரண்டாவது மகன் 5ஆம் வகுப்பும் அப்பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர்.

மேலும், கடந்த 10 நாட்களுக்கும் மேலாக இளைய மகனுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால், பள்ளிக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்த நிலையில், நேற்று (டிச.09) காலை வீட்டில் பெற்றோர் மகனுக்கு உணவளித்துவிட்டு, வேலைக்குச் சென்று விட்டனர்.

பின்னர், பெற்றோர் வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பி உள்ளனர். அப்போது வீட்டில் சிறுவன் இல்லை. இதனால், சிறுவனை அக்கம் பக்கத்தில் தேடி உள்ளனர். அப்போது, சிறுவன் விளையாடிக் கொண்டிருந்ததாக அக்கம்பக்கத்தினர் தெரிவித்து உள்ளனர்.

மேலும், மாயமான சிறுவன் கழுத்தில் ஒன்றரை சவரன் தங்கச் செயினும், ஒரு கிராமில் மோதிரமும் அணிந்து இருந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்ட நிலையில், போலீசாரும் சிறுவனைத் தேடி வந்தனர். இந்த நிலையில், இன்று (டிச.10) சிறுவன் வசித்து வந்த வீட்டின் பக்கத்து வீட்டு மொட்டை மாடியில் சடலமாக கிடந்து உள்ளார்.

இதையும் படிங்க: எதிர்நீச்சல் 2 சீரியலுக்கு நேரம் குறித்த சன் டிவி : குணசேகரனாக நடிக்கும் பிரபல நடிகர்!

இதனைக் கண்டதும் அதிர்ச்சி அடைந்த பக்கத்து வீட்டுக்காரர், இது குறித்து போலீசாருக்கும், பெற்றோருக்கும் தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், சிறுவனை மீட்டு கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், சிறுவன் இறந்து ஆறு மணி நேரமாகியதாக தெரிவித்து உள்ளனர். இதனால் பெற்றோர், உறவினர்கள் மருத்துவமனையில் சிறுவனின் உடலை கண்டுக் கதறி அழுதனர்.

தொடர்ந்து, மாயமான சிறுவன் நகைக்காக கடத்தப்பட்டாரா அல்லது வேறு ஏதும் காரணமா என கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

Hariharasudhan R

Recent Posts

தேசிய விருது இயக்குனரின் படம் ட்ராப்? திருப்தியே இல்லாமல் அலையும் விக்ரம்! அப்படி என்னதான் பிரச்சனை?

தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…

56 minutes ago

வெற்றிமாறன் படத்தில் இயக்குனர் நெல்சன் இடம்பெற்றதன் பின்னணி இதுதான்? சீக்ரெட்டை உடைத்த பிரபலம்!

கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…

2 hours ago

திமுக கூட்டணியில் விழுந்த ஓட்டை… திருமாவை சந்தித்தது குறித்து வைகைச் செல்வன் டுவிஸ்ட்!

பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…

3 hours ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு மருத்துவம் படிக்க உதவிக்கரம்.. கனவை நனவாக்கும் ஷாலோம் எஜூகேஷன்.!

மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…

3 hours ago

வற்புறுத்தி முத்தக்காட்சியில் நடிக்க வச்சாங்க, ஆனா?- மனம் நொந்துப்போய் பேசிய மதுபாலா!

தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…

3 hours ago

அடுத்தடுத்து பாமக எம்எல்ஏக்களுக்கு நெஞ்சுவலி.. பின்னணியின் ‘பலே’ பிளான்?!

பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…

4 hours ago

This website uses cookies.