மதுரை பழங்காநத்தம் பகுதியில் பள்ளி மாடியில் இருந்து தவறி விழுந்ததாக கூறப்படும் சிறுவன் சிகிச்சை பெற்று வருகிறார்.
மதுரை: மதுரை மாவட்டம், பழங்காநத்தம் பகுதியில் பழங்காநத்தம் மாநகராட்சி தொடக்கப்பள்ளி உள்ளது. இங்கு ஐந்தாம் வகுப்பு படித்து வரும் மாணவர் ஒருவர், இன்று (நவ.15) பள்ளியின் மாடியில் இருந்து தவறி கீழே விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் அம்மாணவனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து, அந்த மாணவர் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சையில் உள்ளார். மேலும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடைய, இது குறித்து அறிந்த மாணவரின் பெற்றோர், பள்ளியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும், இதுகுறித்து தங்களுக்கு சரியாக தகவல் அளிக்கவில்லை என்றும் பள்ளி நிர்வாகத்தின் மீது அவர்கள் குற்றம் சாட்டினர். அப்போது திமுக மாமன்ற உறுப்பினர் சுதன் அங்கு வந்தார். அவரை சரமாரியாக கேள்வி எழுப்பிய மாணவரின் பெற்றோர் மற்றும் உறவினர்கள், அவரை அங்கிருந்து விரட்டியடித்தனர்.
மேலும் மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதாகவும், தங்களுக்கு முதலிலே தெரியப்படுத்தி இருந்தால், மிக விரைவில் அவரை மருத்துவமனையில் அனுமதித்து இருக்கலாம் என்றும், இதில் எங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் பெற்றோர் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதையும் படிங்க: கிண்டி மருத்துவமனையில் பறிபோன உயிர்.. கதறும் உறவினர்கள்!
இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், பெற்றோர் உடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.