திருவண்ணாமலை மாவட்டம் தூசி கிராமத்தில் ஒரே நாளில் 5 கோயில்களில் பூட்டு உடைக்கப்பட்டு அம்மனின் தங்க தாலி உள்ளிட்டவை கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பொது மக்களை அதிர்ச்சியடைய வைத்தது.
விசாரணையை கையில் எடுத்த போலீசார் சம்பந்தப்பட்ட இடங்களில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய…சம்பந்தமே இல்லாமல் நள்ளிரவு இரண்டு மணிக்கு சைக்கிளில் சென்ற இரு சிறுவர்களும் மீதும் அவர்களை இருசக்கர வாகனத்தில் பின் தொடர்ந்த மூவர் மீது சந்தேகம் எழுந்தது.
பல்வேறு சிசிடிவி காட்சிகளை வைத்து சிறுவர்களின் தலைவனான ஆரணியைச் சேர்ந்த பாபாவையும் அவர் மூலமாக 6 சிறார்களையும் கைது செய்தனர்.
இவர்கள் பகல் நேரங்களில் கோழிப்பண்ணையில் வேலை செய்வார்கள். இரவு நேரங்களில் கோயில்கள் மற்றும் ஆளிள்லா வீடுகளை நோட்டமிட்டதும் தெரியவந்துள்ளது.
மேலும் கடந்த மூன்றாண்டுகளில் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், இராணிப்பேட்டை போன்ற மாவட்டங்களில் 500 சவரன் நகைகள் வரை கொள்ளையடித்து இருப்பதாக வாக்குமூலம் அளித்திருப்பது போலீசாரை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது.
நகைகளைக் கொள்ளையடித்து அதனை சேட்டு கடைகளில் விற்று அதன் மூலம் கிடைக்கும் பணத்தில் தாராளமாகச் செலவு செய்ததும் தெரிய வந்துள்ளது. மேலும் இவர்களின் பின்னணியில் வேறு யாரேனும் இருக்கிறார்களா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாஸ் காம்போ லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகியுள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்து மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
பகல்காம் தாக்குதல் எதிரொலியாக பாகிஸ்தானுடன் போரை தொடுக்க மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதற்காக முன்கூட்டியே போர் ஒத்திகை…
தென்னிந்தியாவின் டாப் நடிகை தமிழில் “விண்ணைத்தாண்டி வருவாயா” திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் அறிமுகமானவர் சமந்தா. அதனை தொடர்ந்து தமிழ், தெலுங்கு…
ரொமாண்டிக் இயக்குனர் இயக்குனர் கௌதம் மேனன் என்ற பெயரை கேட்டாலே அவரது காதல் திரைப்படங்கள்தான் நமக்கு ஞாபகம் வரும். அந்தளவுக்கு…
கோவை புளியகுளம், அருகே அம்மன் குளம் பகுதியில் புதிய வீட்டு வசதி வாரிய அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் உள்ளது. இங்கே…
நாகர்ஜூனா மகன் நாக சைதன்யா தெலுங்கு படத்தில் முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிகை சமந்தாவுடன் காதல் வயப்பட்டார்.…
This website uses cookies.