மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி பாலசுப்பிரமணியத்திற்காக பிரம்மாண்ட சிலை தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
பாடும் வானம்பாடி, பாடும் நிலா என பல்வேறு அடைமொழிகளால் அழைக்கப்பட்ட பிரபல பின்னணி பாடகர் எஸ்பிபி கடந்த 2020ம் ஆண்டு உலகை விட்டு மறைந்தார். தனது வசீகர குரலால் மக்கள் மனதில் இடம் பிடித்த அவருக்கு வயது 74.
அவரது பூவுடல் காஞ்சிபுரம் மாவட்டம் தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் இருக்கும் அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த பண்ணை வீட்டில் எஸ்பிபிக்கு நினைவில்லம் அமைக்கப்படும் என அவரது மகன் எஸ்பிபி சரண் தெரிவித்திருந்தார்.
அதன்படி ஒராண்டாக பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது நிறைவடையும் தருவாயில் நினைவில்ல பணிகள் நடந்து வருகிறது. இந்த இடத்தில் 6 டன் எடை கொண்ட பாறையில் எஸ்பிபி சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதற்காக புதுச்சேரி ஆலங்குப்பம் சஞ்சீவி நகரில் உள்ள சிற்ப கூடத்தில் உருவாக்கி வருகின்றனர். இதற்காக திருவக்கரையில் 6 டன் எடையில் பாறை எடுக்கப்ப்டடு கடந்த 6 மாதங்களாய் பாறை சிலை உருவாக்கப்பட்டு வருகிறது.
மேலும் எஸ்பிபி அவர்கள் அடிக்கடி உச்சரிக்கும் சொல்லான ”SARVE JANAASSU JANA BHAVANTHU… SARVESU JANAA SSUKINO BHAVAN”என பொறிக்கப்பட்டுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.