6 வருட காதல்.. கடும் எதிர்ப்பால் தாலி கட்டிய கோயம்புத்தூர் மாப்பிள்ளை : தண்டவாளத்தில் தலையை வைத்த ஜோடிகள்!
திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் அருகே புதுச்சத்திரத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(26). இதே ஊரைச் சேர்ந்தவர் தேன்மொழி. இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காதலித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் கடந்த 2020 ஆண்டு தேன்மொழிக்கு கோயமுத்தூரை சேர்ந்த முரளி என்பருவுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. முரளி தனது மனைவி தேன்மொழியுடன் கோயமுத்தூரில் வாழ்ந்து வந்துள்ளார்.
திருமணத்திற்கு பின்பும் தேன் மொழியும் மணிகண்டனும் பழகி வந்துள்ளனர். தேன்மொழி அடிக்கடி மணிகண்டவுடன் தொலைபேசியில் பேசி வந்துள்ளார். இதனை கண்ட முரளி மனைவியை கண்டித்துள்ளார்.
இதனை அடுத்து தேன்மொழி மணிகண்டன் உடன் வீட்டை விட்டு வெளியேறி உள்ளார். தனது மனைவியை காணவில்லை என்ன முரளி கோயமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் இன்று அதிகாலை பாலக்காட்டில் இருந்து பழனி செல்லும் ரயில் முன்பு விழுந்து தேன்மொழியும் மணிகண்டனும் தற்கொலை செய்துள்ளனர். தகவல் அறிந்த பழனி ரயில்வே போலீசார் இருவரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் இச்சம்பவம் குறித்து பழனி ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.