மதுரை : திருமங்கலத்தில் ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் வீட்டில், கொள்ளையடித்த 63 சவரன் தங்க நகைகள் மீட்ட போலீசார் ஒருவரை கைது செய்து மேலம் ஒரு பெண்ணை தேடி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் திருமங்கலம் நகரில் உள்ள கிறிஸ்டியன் காலனி பகுதியில், ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளர் திருமாவளவன், கடந்த மாதம் 24ஆம் தேதி வீட்டில் இருந்து தனது குடும்பத்துடன் வெளியில் சென்றிருந்த நேரத்தை அறிந்து , பட்டப்பகலில் வீட்டின் பின்புற கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் , வீட்டின் பீரோவில் இருந்த 63 சவரன் தங்க நகைகள் மற்றும் ரூ 1.5 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை கொள்ளையடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர் .
இச்சம்பவம் குறித்து திருமங்கலம் போலீசார் தனிப்படை அமைத்து சிசிடிவி கேமரா காட்சிகள் மூலம் தொடர்ந்து குற்றவாளிகளை கண்காணித்து வந்தது .
இதில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் பகுதியைச் சேர்ந்த முத்துராஜ் (வயது 30) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 63 சவரன் தங்க நகைகளை மீட்டுள்ளனர். மேலும் இக் கொலைச் சம்பவத்தில் துணைபோன கீர்த்தனா என்ற பெண்ணை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கொள்ளை போன ரூபாய் 1.5 லட்சம் பணம் குறித்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தனிப்படை போலீசார் துரிதமாக செயல்பட்டு கொள்ளையர்களை பிடித்த சம்பவம் , போலீஸ் அதிகாரிகளால் தனிப்படை போலீசாருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும் கொள்ளையன் முத்துராஜ் மீது பல்வேறு கொள்ளை வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.