விழுப்புரம் : ஆறாம் வகுப்பு பள்ளி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அரசு நிதி உதவி பெறும் உயர்நிலை பள்ளி ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
விழுப்புரம் நகரில் புதுச்சேரி சாலையில் அரசு நிதி உதவி பெறும் உயர்நிலைப் பள்ளி MRIC RC பள்ளி இயங்கி வருகிறது. இங்கு சுமார் 400 க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர்.
கல்விக்கட்டணம் இல்லாததால் சுற்றுப்புற கிராமங்களில் இருந்து ஏராளமான மாணவ மாணவிகள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர்..
இந்நிலையில் விழுப்புரம் அடுத்த பாணம் பட்டு கிராமத்தை சேர்ந்த ஆறாம் வகுப்பு பள்ளி மாணவி இங்கு படித்து வருகிறார். சில நாட்களுக்கு முன் இந்த பள்ளியில் பணியாற்றிவரும் வகுப்பாசிரியர் ஜெயசீலன் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கண்ணீர் மல்க வீட்டில் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் பள்ளி தலைமையாசிரியரிடம் இது குறித்து புகார் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் இந்த தகவல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ண பிரியாவுக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மாவட்ட கல்வி அலுவலர் சுந்தரமூர்த்தி அந்தப் பள்ளியில் மாணவி மற்றும் புகார் தெரிவிக்கப்பட்ட ஜெயசீலன் வைத்து விசாரணை மேற்கொண்டார்.
இந்த விசாரணையின் முடிவில் குற்றம் சாட்டப்பட்ட ஜெயசீலன் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்தார். இதனடிப்படையில் அரசு நிதியுதவி பெறும் பள்ளியின் தாளாளர் குற்றம்சாட்டப்பட்ட ஜெயசீலன் தற்போது தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார்.. பள்ளியில் மாணவிக்கு ஆசிரியர் பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த புகார் மாவட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது..
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.