வடமாநிலங்களில் இருந்து ரயில் மூலம் வரக்கூடிய நபர்கள் ஓடிஸா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கஞ்சா போதை பொருட்களை கொண்டு வந்து விற்பனையில் ஈடுபட்டு வருவதாக தொடர்ந்து காவல்துறையினருக்கு புகார்கள் வந்ததையடுத்து, திருப்பூர் மதுவிலக்கு மற்றும் அமலாக்க பிரிவு போலீசார், ரயில் நிலையம் அருகே ரயில் மூலம் வரக்கூடிய பயணிகளை கண்காணித்து வந்தனர்.
இந்நிலையில், ரயில் நிலையம் அருகே சந்தேகத்திற்கிடமாக நின்றிருந்த நபர்களை பிடித்து மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த முருகேஸ்வரி, பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த அமீர், கோழிக்கோடு பகுதியைச் சேர்ந்த சபீர் பாஷா என்பதும், அவர்களிடம் இருந்த கைப்பையை சோதனை செய்ததில், சுமார் 7 கிலோ 600 கிராம் எடை கொண்ட கஞ்சா இருப்பதும் தெரிய வந்தது.
தொடர்ந்து, மூவர் மீதும் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர். மேலும் அமீர் மற்றும் முருகேஸ்வரி இருவர் மீதும் ஏற்கனவே கஞ்சா வழக்குகள் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.