கோவை மாவட்டம் சூலூரில் ரோந்து பணியின் போது ஒரே எண்ணில் இரண்டு டூரிஸ்ட் வேன்களை நிற்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் அதேபோல் 7 டூரிஸ்ட் வேன்களை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கோவை மாவட்டம் சூலூரில் புதிய பேருந்து நிலையம் அருகே வழக்கமாக டூரிஸ்ட் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படும் இந்நிலையில் நேற்று இரவு சூலூர் போலீசார் புதிய பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது பேருந்து நிலையத்தின் முன்புறமாக ஒரே பதிவு எண் கொண்ட இரண்டு டூரிஸ்ட் வேன்கள் நின்று கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இதனை அடுத்து அந்த வேன் டிரைவரை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதற்கு முன்பாகவே டூரிஸ்ட் டாக்ஸி வைத்து இயக்கும் உரிமையாளர்கள் பேருந்து நிலையத்தில் அருகில் இரண்டு வண்டிகள் ஒரே நம்பரை கொண்டு இயங்குவதை கண்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதனை அடுத்து சூலூர் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை மேற்கண்ட போலீசார் அந்த வாகனத்தின் உரிமையாளர் செந்தில்குமார் என்பதும் இவருக்கு சொந்தமான ஏழு டூரிஸ்ட் வாகனங்களிலும் இதே போன்ற பதிவு எண்ணை தான் வைத்திருப்பதாகவும் ஓட்டுனர் தெரிவித்துள்ளார்.
பின்னர் ஒரே எண்ணில் வாகனத்தை இயக்கி வந்தது போலீஸ் விசாரணையில் தெரிய வந்ததை அடுத்து வாகனத்தின் மீதும் வாகன உரிமையாளர் மீதும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.
ஆர்டிஓ அதிகாரி தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறினார் மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளனர் ஒரே எண்ணில் ஏழு வாகனங்கள் அப்பகுதியில் வலம் வந்தது பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.