15 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து திருமணம் செய்ய வற்புறுத்துவதாக கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ளது வெள்ளையூர் கிராமம். இந்த கிராமத்தில் ஒரு பகுதியில் 60க்கும் மேற்பட்ட கழைக்கூத்தாடி சமூகத்தை சேர்ந்தவர்கள் குடிசை வீட்டில் தங்கி வசித்து வருகின்றனர்.
பத்துக்கும் மேற்பட்ட சிறுமிகள் கல்வி பயின்று வரும் நிலையில் 15 வயது சிறுமியை இதே பகுதியில் வசித்து வரும் பாபுஜி என்ற 70 வயது முதியவர் பாலியல் தொந்தரவு செய்து திருமணம் செய்து கொள்ளுமாறு வற்புறுத்தியதால் ஆத்திரமடைந்த சிறுமியின் உறவினர்கள் 50க்கும் மேற்பட்டோர் இன்று காலை உளுந்தூர்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் போலீசாரிடம் கோரிக்கை வைத்துள்ளனர் இதனால் உளுந்தூர்பேட்டை காவல் நிலையம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.