Categories: தமிழகம்

கேள்வி கேட்டது குத்தமா..? 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநர்..!

பொது பாதையின் குறுக்கே பள்ளம் தோண்டிய நபரை எதிர்த்து கேள்வி எழுப்பிய 70 வயது முதியவரை கல்லால் அடித்து கொன்ற ஆட்டோ ஓட்டுநரை போலீசார் கைது செய்தனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கோளிவாக்கம் பகுதியில் பெருமாள் நாயக்கர் (70) என்பவர் தன்னுடைய மனைவி மகன் மற்றும் மகளுடன் வசித்து வருகிறார். பெருமாள் பெரு விவசாயியாகவும், விவசாயக் கூலியாகவும் இருந்து வருகிறார். தெரிந்த நபர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்தும் வருகிறார்.

ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்களுக்கு திருமணம் ஆகி பேரன் பேத்தி உள்ள நிலையில் தனது குடும்பத்தினருடன் சண்டை போட்டுக் கொண்டு சுமார் ஐந்து வருட காலமாக நேதாஜி நகர் பகுதியில் உள்ள தன்னுடைய மற்றொரு வீட்டில் பெருமாள் தனியாக வசித்து வருகிறார்.

இவரின் வீட்டு அருகே மதன் என்ற ஆட்டோ டிரைவர் தன்னுடைய மனைவி மற்றும் பிள்ளைகளுடன் வசித்து வருகிறார். இவர்கள் இரண்டு பேருக்கும் நடுவே உள்ள பொதுப் பாதையில் (புறம்போக்கு இடம்) மதன் பள்ளம் தோண்டி வீடு கட்ட கடைக்கால் போட முயற்சித்த போது, அப்பகுதி மக்களுடன் சேர்ந்து பெருமாள் அதை தடுத்துள்ளார்.

இருவர் வீடுகளுக்கும் நடுவே உள்ள பொறம்போக்கு இடத்தில் மதன் ஆக்கிரமிப்பு செய்ய முயற்சிப்பதால், அவ்வப்போது இவர்கள் இருவருக்கும் தகராறு ஏற்படுவது உண்டு. அதேபோல் கடந்த மூன்று நாட்களாக இவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு வந்த நிலையில், இன்று காலை பெருமாளை மதன் முறைத்து விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதை பெருமாள் தட்டிக் கேட்டதற்கு இருவருக்குள்ளும் வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் கைகலப்பாக மாறியதையடுத்து ஆவேசமடைந்த மதன் அருகே இருந்த பெரிய கல்லை தூக்கி பெருமாள் தலையின் மீது ஓங்கி போட்டுள்ளார். அதில் பெருமாளின் பற்கள் அனைத்தும் உடைந்து கொட்டியது. முகம் மற்றும் மண்டை உடைந்து ரத்தம் குபு குபு என பெருகியது. ரத்த வெள்ளத்தில் மிதந்த பெருமாள் சம்பவ இடத்திலேயே துடித்து துடித்து உயிரிழந்தார்.

இதைக் கண்ட ஆட்டோ டிரைவர் யூனிஃபார்ம் டிரஸ்ஸுடன் அங்கிருந்து தப்பினார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் வந்து ஆய்வு செய்தார். தாலுக்கா காவல்துறையினர் பெருமாளின் சடலத்தை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு பிரதமர் பரிசோதனைக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய மதனை தேடி வந்தனர்.

ஐயங்கார் குளம் பகுதியில் காக்கி யூனிபார்ம் உடன் மதன் தப்பி செல்வதை கேள்விப்பட்ட தாலுகா காவல் ஆய்வாளர் பேசில் பிரேம் ஆனந்த் மற்றும் காவல் உதவி ஆய்வாளர் துளசி ஆகியோர் மதனை மடக்கி பிடித்து கைது செய்து தாலுக்கா காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து தீவிர விசாரணை செய்து வருகின்றார்கள்.

பட்டப் பகலில் 70 வயது முதிய விவசாயியை, புறம்போக்கு பொது வழிப்பாதை இடத்தை ஆக்கிரமிப்பு செய்ய முயன்ற ஆட்டோ டிரைவர் கல்லை தூக்கி போட்டு முதிய விவசாயியை கொலை செய்தது கோளிவாக்கம் கிராமத்தையே உலுக்கி விட்டது.

Babu Lakshmanan

Babu Lakshmanan, is Sub Editor at Updatenews360.com. With a keen eye for detail and a commitment to journalistic integrity, Babu serves as the Sub Editor at Updatenews360.com. Bringing years of experience in the media industry, he specializes in refining news stories to ensure clarity, accuracy, and engagement. Babu's passion for unearthing the truth and presenting it in an accessible manner drives his daily editorial decisions. His background in journalism, coupled with a deep interest in social issues and technological advancements, contributes to his unique editorial perspective. Off the clock, Babu is an avid reader and a cultural enthusiast, constantly exploring new horizons that enrich his professional and personal life. His dedication to impactful journalism makes him a vital part of the Updatenews360 team, where he continues to uphold the standards of reliable and responsible news reporting.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.