கோவை : கோவை வடக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் ஏலம் 29ம் தேதி நடைபெறுகிறது.
கோவையில் வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களால் பறிமுதல் செய்யப்பட்டு உரிமை கோரப்படாமல் உள்ள வாகனங்கள் மார்ச் 29ம் தேதி திறந்தவெளி ஏலம் விடப்படவுள்ளதாக கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலர் சிவகுருநாதன் தெரிவித்துள்ளர்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவையில் வரி செலுத்தாத, விதிமீறல் உள்ளிட்ட பல்வேறு குற்றங்களுக்காக போக்குவரத்து அலுவலர்கள், மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர்களால் பறிமுதல் செய்யப்பட்ட 72 வாகனங்கள் கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
நீண்ட நாள்களாக உரிமை கோரப்படாமல் உள்ள இந்த வாகனங்கள் போக்குவரத்து கமிஷனர் சுற்றறிக்கையின்படி திறந்தவெளி பொது ஏலம் விட முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்புபவர்கள் மார்ச் 16 முதல் 24ம் தேதி வரை கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் ரூ.500 செலுத்தி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் பிணை முறித்தொகை ரூ.10 ஆயிரத்துக்கான வங்கி வரைவோலை இணைத்து மார்ச் 25ம் தேதி மாலை 5 மணிக்குள் கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நேரடியாக சமர்ப்பிக்க வேண்டும். நடப்பு ஜி.எஸ்.டி. கணக்கு வைத்திருப்பவர்கள் மட்டுமே ஏலத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள். ஏலம் விடப்படும் வாகனங்களை மார்ச் 16 முதல் 25ம் தேதி வரை அலுவலக நாள்களில் பார்வையிடலாம்.
துடியலூரில் உள்ள கோவை (வடக்கு) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் மார்ச் 29ம் தேதி காலை 11 மணிக்கு திறந்தவெளி பொது ஏலம் விடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
This website uses cookies.