புதுச்சேரி : 80 வயது மூதாட்டி கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி, காமராஜ் நகர் தொகுதிக்குட்பட்ட சாமிபிள்ளை தோட்டம், கம்பர் வீதியில் கடந்த 2 ஆண்டுகளாக அஞ்சலை (வயது 80) என்ற மூதாட்டி தனிமையில் வசித்து வந்தார்.
இதனிடையே இன்று காலை முதல் மூதாட்டி அஞ்சலை வீட்டை விட்டு வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் லாஸ்பேட்டை காவல் நிலையத்திற்கு இரவு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்த போது மூதாட்டி அஞ்சலை கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் கொலை செய்யப்பட்டு சடலமாக இருப்பது தெரியவந்தது.
பின்னர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு ஆம்பூலன்ஸ் மூலம் போலீசார் அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணம் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
முதல்கட்ட விசாரணையில் நேற்று இரவு அல்லது இன்று அதிகாலை கொலை நடந்து இருக்கலாம் என போலீசார் என போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
நேற்று பெரம்பூரில் பத்து வயது மாணவி சௌம்யா தனது தாயாருடன் ஸ்கூட்டரில் அமர்ந்துகொண்டு சென்றுகொண்டிருந்தார். அப்போது அந்த ஸ்கூட்டருக்கு பின்னால்…
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
This website uses cookies.