கிருஷ்ணகிரியில், 8ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் முடித்து வைத்ததாக 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவி கழுத்தில் தாலிக்கயிறுடன் இருந்துள்ளார்.
இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியை அழைத்து தனியாக விசாரித்துள்ளனர். அப்போது, நேற்றுதான் தனக்கு திருமணம் ஆனதாக மாணவி கூறி உள்ளார். மேலும், இந்த மாணவிக்கு அவரது பெற்றோரே முன்னின்று திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.
அதே மாவட்டத்தின், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், இந்த மாணவிக்கும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, ஆசிரியர்கள் இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: தயாரிப்பாளரின் காலை வாரும் இளையராஜா…தேவா எவ்ளோ பெஸ்ட்…பிரபலம் பகீர்.!
இந்தத் தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான புகாரின் பேரில், மாணவி மற்றும் மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.