தமிழகம்

கழுத்தில் தாலியுடன் வகுப்புக்கு வந்த 8ஆம் வகுப்பு மாணவி.. பகீர் பின்னணி!

கிருஷ்ணகிரியில், 8ஆம் வகுப்பு மாணவிக்கு திருமணம் முடித்து வைத்ததாக 5 பேர் மீது மகளிர் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர் 13 வயது சிறுமி. இவர், தான் வசிக்கும் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த நிலையில், நேற்று பள்ளிக்கு வந்த மாணவி கழுத்தில் தாலிக்கயிறுடன் இருந்துள்ளார்.

இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஆசிரியர்கள், மாணவியை அழைத்து தனியாக விசாரித்துள்ளனர். அப்போது, நேற்றுதான் தனக்கு திருமணம் ஆனதாக மாணவி கூறி உள்ளார். மேலும், இந்த மாணவிக்கு அவரது பெற்றோரே முன்னின்று திருமணம் நடத்தி வைத்துள்ளனர்.

அதே மாவட்டத்தின், காவேரிப்பட்டணம் பகுதியை சேர்ந்த 25 வயது இளைஞருக்கும், இந்த மாணவிக்கும் நேற்று முன்தினம் அப்பகுதியில் உள்ள கோயிலில் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்று உள்ளது. இதனையடுத்து, ஆசிரியர்கள் இது குறித்து சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க: தயாரிப்பாளரின் காலை வாரும் இளையராஜா…தேவா எவ்ளோ பெஸ்ட்…பிரபலம் பகீர்.!

இந்தத் தகவலின் பேரில் பள்ளிக்கு வந்த குழந்தைகள் நல அலுவலர்கள் மற்றும் சமூக நலத் துறை அலுவலர்கள், சம்பந்தப்பட்ட மாணவியிடம் விசாரணை நடத்தி உள்ளனர். மேலும், இது தொடர்பான புகாரின் பேரில், மாணவி மற்றும் மணமகனின் பெற்றோர், மணமகன் ஆகிய 5 பேர் மீது வழக்குப் பதிவு செய்த கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.