தமிழகம்

கோவையில் இருந்து திருப்பதி செல்லும் பேருந்தில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை ; ஆந்திர சுற்றுலாத்துறை அதிர்ச்சி!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்வதற்காக ஆந்திர மாநில சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா மேம்பாட்டு திட்டத்தின் கீழ் தேவஸ்தானம் ஒதுக்கீடு செய்த ₹ 300 டிக்கெட் மூலம் சாமி தரிசனம் செய்யும் விதமாக கோயம்புத்தூர், சேலம் இடையே இரண்டு பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வந்தது.

பல்வேறு மாநிலங்களுக்கு சுற்றுலா வளர்ச்சியின் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட டிக்கெட்கள் முறைகேடாக விற்பனை செய்யப்படுவதை அறிந்த தேவஸ்தான அறங்காவலர் குழு கடந்த ஆண்டு இறுதியில் அனைத்து மாநில சுற்றுலாத்துறைக்கு ஒதுக்கீடு செய்த டிக்கெட்கள் ரத்து செய்தனர்.

இதையும் படியுங்க: நான் அம்மணமா வந்தேன்னு? என்னென்னமோ பேசுறீங்க?- கொதித்தெழுந்த வடிவேலு…

இதனால் கோயம்பத்தூர் , சேலம் ஆகிய இடங்களில் இருந்து இயக்கப்பட்ட இரண்டு சேவைகளில் அந்தந்த பகுதியில் உள்ள இரண்டு முகவர்கள் ஒத்துழைப்புடன் ஒரு சேவையாக மாற்றப்பட்டது.

மேலும் இந்த சுற்றுலா பேக்கேஜ் கீழ் ஆன்லைன் முன்பதிவு, மற்றும் கோவை, சேலம் முகவர்கள் மூலம் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே இந்த பஸ்சில் ஏற்றி செல்லப்பட வேண்டும்.

இதில் பயணம் மேற்கொள்ளும் பக்தர்களுக்கு திருப்பதியில் வழங்கப்படும் சர்ச தரிசன வரிசையில் விடப்பட்டு அதில் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படும்.

அவ்வாறு திருநாவுக்கரசு என்பவர் அவரது 9 வயது மகள் உள்பட குடும்பத்தினர் கோயம்புத்தூரில் இருந்து திருப்பதிக்கு பேக்கேஜ் கீழ் முன்பதிவு செய்து பயணம் செய்தார்.

இதே பஸ்சில் பேக்கேஜ் கீழ் முன்பதிவு செய்யாத பயணியை கோவையில் இருந்து சேலத்திற்கு ₹ 200 பணம் பெற்று டிக்கெட் எதுவும் வழங்காமல் பயணியை பஸ்சில் இருந்த டிரைவர்கள் பி.வி.பிரசாத், எம்.வி. ரமணா ஆகியோர் ஏற்றி கொண்டனர்.

அவ்வாறு பஸ்சில் ஏறிய பயணி ஒருவர் திருநாவுக்கரசின் 9 வயது மகளுக்கு பாலியியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனை கவனித்த திருநாவுக்கரசு குடும்பத்தினர் அனைவரும் அதிர்ச்சியும் மனவேதனையும் அடைந்து டிரைவரிடம் தெரிவித்தார்.

இதனையடுத்து அந்த நபரை டிரைவர் நெடுஞ்சாலையில் இறக்கி விட்டனர். இருப்பினும் பஸ்சில் டிரைவர்கள் பேக்கேஜ் கிழ் முன்பதிவு செய்தவற்களை தவீர மற்ற பயணிகளை ஏற்றி செல்லக்கூடாது என்ற நிபந்தனை இருப்பினுன் அதற்கான ரூட் அனுமதி இல்லாமல் பயணியை ஏற்றியதால் தான் தனது மகளுக்கு இதுபோன்ற சம்பவம் நடந்ததாகவும், பஸ்சில் உள்ளே சிசிடிவி கேமராவும் செயல்படவில்லை என திருநாவுக்கரசு தமிழக முதல்வருக்கு தனக்கு நடந்த சம்பவத்தை புகார் அளித்தார்.

இந்த புகார் ஆந்திர முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆந்திர முதல்வர் அலுவலகம் சுற்றுலாத்துறைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து சுற்றுலாத்துறை விசாரனை செய்ததில் டிரைவர்கள் பி.வி. பிரசாத் , எம்.வி. ரமணா ஆகியோர் கோவையில் உள்ள தசரதன் டிராவல்ஸ் கோவை மூலம் முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்களை தவீர்த்து கோயம்புத்தூரிலிருந்து சேலத்திற்கு அங்கீகரிக்கப்படாத பயணிகளை ஏற்றி, தலா ₹ .200 வசூலித்தது தெரிய வந்தது.

இந்த வழித்தடத்தில் பேக்கேஜ் தவீர்த்து வழித்தட டிக்கெட் பெற அனுமதி இல்லாத நிலையில் டிரைவர்கள் பணம் ஆசைக்காக அங்கீகரிக்கப்படாத பயணிகளை ஏற்றியதே 9 வயது சிறுமி மீது தவறான நடத்தைக்கு வழிவகுத்தது கண்டறிந்தனர்.

இதனால் டிரைவர்கள் பி.வி. பிரசாத் மற்றும் எம்.வி. ரமணா ஆகியோருக்கு உடனடியாக பணி அமர்த்த வேண்டாம் என்றும் அவர்களிடம் விளக்கம் பெற்று இருவரையும் விஜயவாடாவில் உள்ள சுற்றுலாத்துறை தலைமை அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.