ஸ்ரீவைகுண்டத்தில் மீட்கப்பட்ட 957 பேர்.. விழுப்புரம் ரயில் நிலையத்தில காலை உணவு.. கண்ணீர் மல்க நன்றி கூறிய பயணிகள்!
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் மீட்கப்பட்ட பயணிகளுக்கு விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையத்தில் காலை உணவு பயணிகளுக்கு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் சிக்கித் தவித்த 957 பயணிகள் மீட்கப்பட்டு பத்திரமாக சிறப்பு ரயிலில் வாஞ்சி மணியாச்சியிலிருந்து சென்னைக்கு செல்கின்றனர்
கடந்த இருதினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி திருச்செந்தூர் திருநெல்வேலி ஆகிய பகுதிகளில் பெய்த அதிதீவிர மழையின் காரணமாக சுற்று வட்டார பகுதிகள் வெள்ளகாடாக மாறியது.
இதனால் சாலை போக்குவரத்து பல இடங்களில் துண்டிக்கபட்டது. அதேபோல ஸ்ரீ வைக்குண்டம் ரயில் நிலைய இருப்பு பாதை வெள்ளநீரால் சேதம் அடைந்தது இதனால் திருச்செந்தூர் – சென்னை ரயில் பயணிகளுடன் சிக்கியது.
ஸ்ரீவைகுண்டம் ரயில் நிலையத்தில் கடந்த மூன்று நாட்களாக
பேரிடர் மீட்பு குழுவினர் படகுகள் ஹெலிகாப்டர் மூலமாகவும் சிக்கி தவித்த பயணிகளை படிப்படியாக மீட்டனர்.
தற்போது மீட்கப்பட்ட 957 பயணிகளையும் பேரிடர் பாதுகாப்பு குழுவினர் ஐந்து சிறப்பு பேருந்துகளில் அவர்களை அழைத்துக் கொண்டு வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையத்தில் இருக்கக்கூடிய சிறப்பு ரயிலில் சென்னைக்கு இரவு 11 மணி அளவில் பத்திரமாக சென்னைக்கு அனுப்பிவைத்தனர். இந்த சிறப்பு ரயிலானது விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையம் வந்து அடைந்தது.
இவர்களுக்கு தெற்கு ரயில்வே சார்பில் விழுப்புரம் ரயில் சந்திப்பு நிலையத்தில் காலை உணவு மற்றும் தண்ணீர் குழந்தைகளுக்கு பால் உள்ளிட்ட அத்தியாவசிய உணவு பொருட்கள் வழங்கபட்டது.
அப்போது பயணிகள் உணவு பொட்டலங்கள் வழங்கிய ரயில்வே ஊழியர்களுக்கு நன்றியை தெரிவித்தனர். பின்னர் ரயில் 15 நிமிடங்களில் கிளம்பியது.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.