Categories: தமிழகம்

படுக்கையறையில் தூக்கில் தொங்கிய 9ஆம் வகுப்பு மாணவன்… விசாரணையில் பகீர் : ஷாக் சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்து ராக்கியபாளையம், பாலாஜி நகர் பகுதியை சேர்ந்தவர் ரேணுகாதேவி (34).

இவர் திருப்பூர் கல்லூரி சாலையில் உள்ள ஸ்டுடியோவில் எடிட்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது கணவர் கனகராஜ் கடந்த எட்டு ஆண்டுகளுக்கு முன்பு இறந்துள்ளார்.

காதல் திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு, ராக்கியாபாளையம் அரசு உயர்நிலைப்பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வரும் விதர்ஷனா (15) என்ற மகளும் மற்றும் அதே பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வரும் ஹர்ஷன் (14) என்ற மகனும் உள்ளனர்.

ரேணுகா தேவி தனது குழந்தைகளுடன் ராக்கியாபாளையம் பாலாஜி நகர் பகுதியில் உள்ள தனது அப்பா மருதநாயகம் அம்மா சுமதி ஆகியோருடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று ரேணுகா தேவியின் மகன் ஹர்ஷன் வழக்கம் போல பள்ளிக்கு சென்று விட்டு மாலை வீட்டின் அருகே டியூஷன் சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளார்.

வீட்டிற்கு வந்ததும் வீட்டின் மேல் தளத்தில் உள்ள படுக்கை அறைக்கு சென்றுள்ளார். இதையடுத்து நீண்ட நேரம் ஆகியும் ஹர்ஷன் வெளியே வராததால் அவரது பாட்டி சுமதி, இரவு சென்று பார்த்தபோது, படுக்கையறையில் தூக்கில் தொங்கியபடி ஹர்ஷன் இருந்துள்ளார்.

அதை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது பாட்டி சுமதி அக்கம்பக்கத்தினர் உதவியுடன் ஹர்ஷனை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியதை அடுத்து, இரவு அவிநாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஹர்ஷன் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த திருமுருகன்பூண்டி போலீசார் பிரேதத்தை அவிநாசி அரசு மருத்துவமனையில் உள்ள பிரேதப் பரிசோதனை அறையில் பிரேத பரிசோதனைக்காக வைத்தனர்.

மேலும், சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.டியூசன் முடித்து வந்த சிறுவன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன என்பது குறித்து இதுவரை இந்த தகவலும் தெரியவில்லை.

இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பள்ளி முடித்து வந்த சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.