பள்ளி மாணவன் தற்கொலை அதிகாரத்தில் பள்ளி நிர்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க கோரி கே.வி.குப்பத்தில் கடையடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் அடுத்த காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்த செல்வராஜ் – உஷா தம்பதியின் மகன் ஜீவரத்தினம் (14 ). இவர் கே.வி.குப்பம் பகுதியில் உள்ள (சாய் குருஜி பள்ளி) தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில், இவர் கடந்த 24ம் தேதி அன்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து கே.வி.குப்பம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதனிடையே, மாணவன் தற்கொலைக்கு பள்ளி நிர்வாகம் தான் காரணம் எனக் கூறி, பள்ளி நிர்வாகத்தை விசாரிக்க வேண்டும் என வலியுறுத்தி கே.வி.குப்பம் காவல் நிலையத்தை பள்ளி மாணவனின் உறவினர்கள் முற்றுகையிட்டர்.
இதனைத் தொடர்ந்து, மாணவனின் தற்கொலைக்கு காரணம் பள்ளி நிர்வாகம் தான் காரணம் என கூறி பள்ளி நிர்வாகத்தின் மீது சரியான நடவடிக்கை எடுக்க கோரி சமூக ஆர்வலர்கள் மற்றும் கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில் கே.வி.குப்பம் பகுதியில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.