விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த டியூசன் ஆசிரியை (வயது 22) ஒருவர், தனது கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார். தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றியவர். தற்போது வீட்டிலேயே மாணவர்களுக்கு டியூசன் நடத்தி வந்தார்.
இவரிடம் 15 வயது மாணவன் டியூசன் படித்துள்ளான். இந்த நிலையில் டியூசன் ஆசிரியைக்கும், மாணவனுக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பழக்கம் சில முறை எல்லை மீறியதாகவும் தெரிகிறது.
இதுகுறித்து அறிந்த மாணவனின் பெற்றோர், மாணவனை டியூசன் அனுப்புவதை நிறுத்தி உள்ளனர். ஆனாலும் டியூசன் ஆசிரியை, மாணவன் தகாத உறவு தொடர்ந்துள்ளது. மாணவனின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அவனது பெற்றோர், சிறுவனை 181 மையத்தில் ஆஜர்படுத்தி கவுன்சிலிங் கொடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் தனது மகனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டியூசன் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மாணவனின் தந்தை சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில் போலீசார் போக்சோ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, டியூசன் ஆசிரியையை கைது செய்தனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.