திருப்பூர் அருகே 17 வயது சிறுமிக்கு விடிய விடிய கூட்டுப் பாலியல் கொடுமை : அதிர்ச்சி சம்பவம்!
திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில் கடந்த 9ம் தேதி இரவு வீரக்குமார சாமி கோவில் தேரோட்ட கலை நிகழ்ச்சிகளை பார்த்து கொண்டிருந்த 17 வயது சிறுமியை கடத்திய 6 பேர் கொண்ட கும்பல் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று அதிகாலை வரை கூட்டு பலாத்காரம் செய்து மீண்டும் அதிகாலை கோவில் அருகே விட்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர் .
இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்ததை தொடர்ந்து பாதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் வெள்ளகோவில் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இவ்வழக்கில் தொடர்புடையதாக வெள்ளகோவில், காமராஜபுரத்தை சேர்ந்த பிரபாகர் (32), செம்மான்டபாளையத்தை சேர்ந்த மணிகண்டன் (29) மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த தினேஷ் (27), வெள்ளகோவில், பாரதிநகரை சேர்ந்த தமிழ்செல்வன் (எ ) சதீஸ் (28), வெள்ளகோவில், ஓரம்புபாளையத்தை சேர்ந்த நவீன்குமார் (26), வெள்ளகோவில், சுந்தராண்டிவலசை சேர்ந்த நந்தகுமார் (30), மூலனூர், தொட்டம்பாளையத்தை சேர்ந்த பாலசுப்பிரமணி (30) என 7 பேரை கைது தனிப்படை போலீஸார் கைது செய்து திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் தொடர்புடைய மேலும் ஒருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.