தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியைச் சேர்ந்த சிவா (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) என்பவர் மணி என்பவரிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் சிவாவால் பணம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
கடன் வாங்கியவரின் 19 வயது மகளான ராணி (பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது) சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகிறார்.
சிவா பணம் கொடுக்க முடியாத நிலையில் எட்டு மாதங்களுக்கு முன்பு சிவாவின் மகள் ராணியை பணம் கொடுத்த மணி என்பவர் தூண்டுதலின் பேரில் பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்த பழனி, நவநீத், சுரேஷ், ஹரி ஆகிய நான்கு பேரும் சேர்ந்து ராணியை காரில் கடத்திச் சென்று காரில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து செல்போனில் படம் பிடித்துள்ளனர்.
அதை வெளியில் தெரிவித்தால் வலைதளங்களில் போட்டு விடுவதாக மிரட்டியதாக பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் தற்பொழுது 5 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இளம் பெண் கொடுத்த புகாரின் சம்பந்தப்பட்ட ஐந்து நபர்களும் பெரியகுளம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.