வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மைனர் பெண். அவர் அணைக்கட்டில் இயங்கி வரும் அரசு பெண்கள் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார்.
அதேபோல், அணைக்கட்டு காந்தி நகர் காளியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் சங்கர்(20), இவருக்கும் மைனர் பெண்ணுக்கும் நட்பு ரீதியாக பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், சங்கர் மைனர் பெண்ணிடம் உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மைனர் பெண்ணை கடத்தி சென்றுள்ளார்.
பின்னர் அணைக்கட்டு பகுதியில் உள்ள ஒரு கோயிலில் மைனர் பெண்ணிற்கு தாலி கட்டியதாக கூறப்படுகிறது. இதற்கிடையே, தனது மகளை காணவில்லை என்று மைனர் பெண்ணின் பெற்றோர் வேப்பங்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
அதன்படி, போலீசார் சங்கர் மற்றும் மைனர் பெண்ணை தேடி வந்தனர். இந்நிலையில் சங்கர் மைனர் பெண்ணுடன் அணைக்கட்டில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்படி இன்ஸ்பெக்டர் முத்துச்செல்வன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சங்கரை சுற்றிவளைத்து பிடித்தனர். மேலும் அவரிடம் இருந்து மைனர் பெண்ணை மீட்டு வேப்பங்குப்பம் காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
பின்னர் மைனர் பெண்ணை கடத்தி சென்று திருமணம் செய்த குற்றத்திற்காக சங்கர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிந்து கைது செய்தனர்.
தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரை வேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். அதேபோல் மீட்கப்பட்ட மைனர் பெண்ணுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு வேலூரில் உள்ள காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் நேற்று விபத்துக்குள்ளானது அழியாத சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் விமானத்தில்…
நீலகிரி மாவட்டம் உதகையில் உலக குருதி கொடையாளர்கள் தினத்தை ஒட்டி, பொது மக்களிடையே குருதி வழங்குவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும்…
சிறந்த இயக்குனர்… தமிழ் சினிமாவின் மிகச் சிறந்த இயக்குனர்களுள் ஒருவராக வலம் வருகிறார் மாரி செல்வராஜ். சமீபத்தில் “வாழை” திரைப்படத்தின்…
சென்னை பாடியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் கே ஆர் வெங்கடேசன்இவர் மீது ஏற்கனவே தமிழக காவல்துறை மற்றும் ஆந்திராவில் பல்வேறு வழக்குகள்…
விஜய்யின் கல்வி விருது விழா கடந்த இரண்டு ஆண்டுகளாக சட்டமன்ற தொகுதி வாரியாக 10 மற்றும் 12 ஆம் வகுப்புப்…
கோவை தொண்டாமுத்தூர் உலிப்பாளையம் பகுதியைச் சேர்ந்த செல்வராஜ். இவர் எல்.ஐ.சி முகவராக இருந்து வருகிறார். இவரது மனைவி சுஜாதா, மகன்…
This website uses cookies.