தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் பொட்டிபுரம் ஊராட்சி மன்ற தலைவராக இருந்து வருபவர் செல்வராஜ்.
இவர் சிறு வயதில் இருந்தே குறி சொல்லி வருகிறார். இவர் சொல்வது நடப்பதாக அப்பகுதி மக்கள் குறி கேட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் தேனி மஞ்சள்நாயகன்பட்டியை சேர்ந்த காமாட்சி என்ற 22 வயது இளம் பெண், கணவரை பிரிந்து வாழ்வதாகவும், அவருடன் சேர்ந்து வாழ குறி கேட்க, தனது தோழி மற்றும் அவரது கணவருடன் செல்வராஜை சந்தித்துள்ளார்.
எல்லா பிரச்சனைகளையும் காமாட்சியிடம் கேட்ட செல்வராஜ், அடுத்த முறை வரும் போது தனியாக வரும்படி கூறியுள்ளார்.
இதையடுத்து 2 நாள் கழித்து மீண்டும் செல்வராஜை அப்பெண் சந்தித்து குறி கேட்டுள்ளார். உடனே செல்வராஜ், அந்த பெண்ணை வைத்து யாகம் நடத்தி, தாயத்து கயிறு கட்ட வேண்டும் இதற்காக தோட்டத்துக்கு செல்ல வேண்டும் என கூறி அழைத்து சென்றுள்ளார்.
பின்னர் நிர்வாணமாக நிற்க வேண்டும் என செல்வராஜ் கூற, இளம்பெண் முடியாது என மறுக்கவே, கணவருக்காகத்தான் என வற்புறுத்தியுள்ளார்.
இதையடுத்து ஆடைகளை கழற்றி நிர்வாணமாக நின்றுள்ளார். உடனே செல்வராஜ் தனது செல்போனில் இளம்பெண்ணுக்கு தெரியாமல் வீடியோவாக எடுத்துள்ளார்.
இதை கவனித்த இளம்பெண், உடனை அதை தடுக்க முற்பட்ட போது, பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். உடனே அந்த பெண் கூச்சலிட, செல்வராஜ் தப்பியோடியுள்ளார்.
இதையடுத்த அப்பெண் எஸ்பி அவலுகத்திற்கு சென்று புகார் அளித்துள்ளார். மேலும் தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தது மட்டுமல்லாமல் ரூ.20 ஆயிரம் பணம் தாயத்துக்காக வாங்கியதாகவும் புகார் கூறியுள்ளார்.
இதனிடையே தான் குறி சொல்வதை கைவிட்டு பல ஆண்டுகள் ஆனதாகவும், தன்னுடைய அரசியல் வாழ்க்கைக்கு தடையை உருவாக்க இளம்பெண் மூலம் சிலர் பொய்புகார் அளிக்க முயற்சிப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.