திருவள்ளூர் : பழவேற்காடு அருகே தேங்காய் தொண்டையில் சிக்கி மூன்று வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அருகே பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் வசந்த். இவருக்கு 2 குழந்தைகள் உள்ளது. இதில் இளைய மகன் சஞ்சீஸ்வரன்(3) இன்று காலையில் வீட்டிலிருந்த தேங்காயினை சாப்பிடும்போது தேங்காய் துண்டொன்று தொண்டையில் சிக்கி கொண்டது. இதனால் குழந்தை மூச்சு திணறி துடிப்பதை கண்டு உறவினர்கள் பழவேற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வரும் வழியில் மூச்சு திணறி குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இதனால் குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் மருத்துவமனையில் கதறி அழுதுள்ளனர். இந்த சம்பவம் குறித்து திருபாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேங்காய் தொண்டையில் சிக்கி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தில் ஆழ்ந்தியுள்ளது.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.