தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள சீலையம்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சின்னப்பாண்டி இவர் கேரளாவில் கோழி கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி முத்துலட்சுமி கூலி வேலை செய்து வருகிறார். இத்தம்பதியினருக்கு ஆண் குழந்தை ஒன்றும் பெண் குழந்தை ஒன்றும் பள்ளியில் படித்து வந்துள்ளனர்.
இந்நிலையில் சீலையம்பட்டியில் உள்ள அரசு உதவி பெறும் கம்பர் நடுநிலைப் பள்ளியில் இவர்களது இரண்டாவது மகள் ரித்திகா மூன்றாம் வகுப்பு படித்து வருகிறார். இன்று காலை வழக்கம்போல் பள்ளிக்கூடத்திற்கு சென்று தனது வகுப்பறையில் அமர்ந்திருந்த போது ஜன்னல் அருகே இருந்த ஜன்னல் சுவர் ரித்திகா மீது இடிந்து விழுந்தது இதில் மாணவி ரித்திகா படுகாயம் அடைந்தார்.
உடனடியாக ஆசிரியர்கள் மாணவியை மீட்டு சின்னமனூர் அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வந்துள்ளனர்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பின் மேல் சிகிச்சைக்காக தேனி தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பதற்காக மாணவியை கொண்டு சென்றனர்.
பள்ளி மாணவி ஒருவர் சுவர் இடிந்து விழுந்து படுகாயம் அடைந்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியிலும், அப்பகுதி மக்களிடையேயும் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்துச் சென்றதால், தற்காலிகமாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவம் குறித்து சின்னமனூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.