சென்னையில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் பலி… மாநகராட்சியே காரணம் என கூறி உறவினர்கள் போராட்டம்!!
பொதுவாக வானிலை காலமாற்றம் ஏற்படும் போது குறிப்பாக மழைக்காலங்களில் அதிகமாக காய்ச்சல், சளி, இருமல் போன்ற ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு தொற்றும் நோய்கள் வருவது வழக்கம். அதனை தடுக்க மாநகராட்சி ஊழியர்களும் தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுவார்கள். இந்நிலையில் குறிப்பாக டெங்கு, மலேரியா, உள்ளிட்ட நோய்களை தடுக்க மாநகராட்சி அதிகாரிகள் அதிக கவனம் மேற்கொள்ளுவார்கள்.
தற்போது பருவமழை தொடர்ந்து ஆங்காங்கே பெய்து வரும் நிலையில், டெங்கு காய்ச்சல் காரணமாக சென்னை அரசு மருத்துவமனையில் நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்த அய்யனார் என்பவரது மகன் ரக்சன். நான்கு வயது சிறுவனான ரக்சன் சில தினங்களுக்கு முன்னர் காய்ச்சல் பாதிப்பால் உடல்நல கோளாறு அடைந்துள்ளார்.
உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்து சென்றுள்ளனர். இதில் காய்ச்சல் மேலும் தீவிரமடையவே, கடந்த திங்கள் அன்று சென்னை சென்னை எழும்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளான்.
உடனடியாக சிறுவனை பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவனுக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதிப்படுத்தி உள்ளனர். இதனை தொடர்ந்து டெங்கு காய்ச்சலுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்துள்ளது. ஆனால் நேற்று இரவு திடீரென சிகிச்சை பலனின்றி சிறுவன் ரக்சன் உயிரிழந்துள்ளான்.
சிறுவனின் உயிரிழப்புக்கு மாநகராட்சி ஊழியர்கள் குடியிருப்பு பகுதியை முறையாக பராமரிக்காததும், நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளாததுதான் காரணம் என உறவினர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் போராட்டம் நடத்த போவதாக உறவினர்கள் அறிவித்த காரணத்தால் அப்பகுதியில் காவல்துறையினர் குவிக்கப்பட்டு உள்ளனர். சுகாதாரத்துறை அதிகாரிகள் குடியிருப்பு பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.