பண்ருட்டியில் போலியான ஆன்லைன் லாட்டரியில் பணம் பறிகொடுத்த 55 வயது உடைய முதியவர் இனி யாரும் ஏமாற கூடாது என்பதற்காக காவல் நிலையத்தில் கதறியதால் லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நான்கு முனை சந்திப்பு அருகே பாலமுருகன் என்பவருக்கு சொந்தமான ஜெராக்ஸ் கடை உள்ளது. இந்த கடையில், போலியாக ஆன்லைன் மூலமாக லாட்டரி சீட்டு விற்பனை நடைபெற்று வருவதாகவும், இதனை வாங்கி பல பேர் லட்சக்கணக்கான ரூபாய் அளவில் பணத்தை இழந்து உள்ள நிலையில், பாதிக்கப்பட்ட ஒருவர் மனவேதனையில் பண்ருட்டி காவல் நிலையத்தில் 55 வயது உடைய முதியவர் ஒருவர் புகார் தெரிவித்து கதறியதாக கூறப்படுகிறது.
இதனை அடுத்து, பண்ருட்டி போலீசார் புகாரின் அடிப்படையில் ரகசியமாக போலி லாட்டரி விற்பனை செய்யும் கடையை கண்காணித்து வந்த நிலையில், போலி ஆன்லைன் லாட்டரி விற்பனை செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டன. இதனை அடுத்து, பண்ருட்டி பகுதியைச் சேர்ந்த பாலமுருகன் (வயது 47 ), விஸ்வநாதன் (வயது 58),
சக்திவேல்(வயது 32), மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த கபாலி(வயது 44) ஆகிய நான்கு பேரை பண்ருட்டி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.
மேலும், விற்பனைக்கு வைத்திருந்த ரூபாய் 2,27,000 மதிப்புள்ள லாட்டரி சீட்டுகள் 5000 பணம் இருச்சக்கர வாகனம் லாட்டரி அடிப்பதற்கு பயன்படுத்திய இரண்டு லட்சம் மதிப்புள்ள கம்ப்யூட்டர் மற்றும் ஜெராக்ஸ் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் பறிமுதல் செய்து நான்கு பேரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
துரையில் நடைபெறும் முருக பக்தர்கள் மாநாடு குறித்து ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் உள்ள தனியார் மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இதற்காக…
This website uses cookies.