ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெமிலி அடுத்த சயனபுரம் காலனியில் வசித்து வருபவர் சேட்டு. இவரது மகன் சஞ்சய் (21). இவர் டிப்ளமோ படித்துவிட்டு சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தமிழரசன் என்பவரும் நெமிலி பஜாரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது சயனபுரம் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே வரும் போது எதிரே வந்த மாடு மீது அதிவேகமாக மோதியுள்ளனர். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சஞ்சய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் லேசான காயத்துடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.