ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அருகே மாடு மீது பைக் மோதி விபத்துக்குள்ளானதில் வாலிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெமிலி அடுத்த சயனபுரம் காலனியில் வசித்து வருபவர் சேட்டு. இவரது மகன் சஞ்சய் (21). இவர் டிப்ளமோ படித்துவிட்டு சுங்குவார் சத்திரத்தில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். இந்நிலையில் நேற்று மாலை இவரும், அதே பகுதியை சேர்ந்த இவரது நண்பர் தமிழரசன் என்பவரும் நெமிலி பஜாரில் உள்ள கடைக்கு சென்றுவிட்டு மீண்டும் பைக்கில் வீடு திரும்பியுள்ளனர்.
அப்போது சயனபுரம் ஆலமரம் பஸ் ஸ்டாப் அருகே வரும் போது எதிரே வந்த மாடு மீது அதிவேகமாக மோதியுள்ளனர். இதில் இருவரும் தூக்கி வீசப்பட்ட நிலையில், சஞ்சய் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தமிழரசன் லேசான காயத்துடன் அரக்கோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த நெமிலி போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.