திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே கோவை திருச்சி தேசிய நெடுஞ்சாலை பொங்கலுரில் பல்லடத்தில் இருந்து பொங்கலூர் நோக்கி சரக்கு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது.
பின்னால் வந்த இரு சக்கர வாகனம் லாரியை முந்திச் சென்றது. அப்போது எதிரே பொங்கலூரில் இருந்து பல்லடம் நோக்கி வந்த கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளனது.
இதில் இரு சக்கர வாகனம் சுக்குநூறாக நொறுங்கியது. அதிலிருந்த பொங்கலூரை சேர்ந்த இசக்கி பாண்டி,கோவிந்தராஜ் ஆகிய இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து தகவலரிந்து சம்பவயிடம் விரைந்து சென்ற அவினாசிபாளையம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்து போக்குவரத்தை சீர் செய்தனர்.
முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் காயமடைந்தவர்கள் கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நிகழ்ந்த இந்த விபத்து குறித்த பதை பதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள் உள்ளூர் வாட்ஸ் அப் குழுக்கள் மற்றும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.