Categories: தமிழகம்

அண்ணே அண்ணே காப்பாத்துங்க.. 100 அடி கிணற்றில் தவறி விழுந்து கத்திய காட்டெருமை..!

சத்தியமங்கலம் அருகே 100 அடி கிணற்றில் தவறி விழுந்து உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த காட்டு எருமையை தீயணைப்பு துறையினர் உதவியோடு மீட்ட வனத்துறையினர் அதை பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டனர்.

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம், அருகே உள்ள புது குய்யனூர் பகுதியைச் சேர்ந்தவர் விவசாயி முத்துசாமி. வனப்பகுதியை ஒட்டி இவரது தோட்டம் அமைந்துள்ளது. இவரது தோட்டத்திற்கு அருகாமையிலேயே உள்ள கிணற்றில் நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வழி தவறி வந்த காட்டு எருமை ஒன்று எதிா்பாராதவிதமாக சுமார் 100 ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது.

அதிகாலை கிணற்றில் இருந்து சத்தம் கேட்டு எட்டி பார்த்த போது உள்ளே காட்டு எருமை தண்ணீரில் தத்தளிப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் மூலம் சத்தியமங்கலம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவல் இருந்து சம்பவ இடத்திற்கு வந்த சத்தியமங்கலம் வனத்துறையினர் சத்தியமங்கலம் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அங்கு வந்த தீயணைப்புத் துறையினர் கிணற்றில் தவறி விழுந்த காட்டு எருமையை கிரேன் உதவியுடன் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு காட்டு எருமையை பத்திரமாக மீட்டனர். பின்னர், வனக்கால்நடை மருத்துவர் அதற்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். அதன் பின்னர் அடர்ந்த வனப்பகுதிக்கு கொண்டு சென்று விட்டனர். நீண்ட நேரம் போராடி காட்டு எருமையை மீட்ட வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறையினருக்கும் அப்பகுதி மக்கள் பாரட்டு தெரிவித்தனர்.

Poorni

Recent Posts

காவல்துறையின் ஈரல் மட்டுமல்ல இதயமும் கெட்டுவிட்டது… சிபிஎம் மாநில செயலாளர் சண்முகம் ஆவேசம்!

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் போலீஸ் விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தை கண்டித்து…

5 minutes ago

மாட்டுக்கறி சாப்புட்டு இராமரா நடிக்கலாமா? சர்ச்சைக்குள் சிக்கிய ரன்பீர் கபூர்! சின்மயியின் தரமான பதிலடி!

இராமராக ரன்பீர் கபூர்? ரன்பீர் கபூர் இராமராகவும் சாய் பல்லவி சீதாவாகவும் நடித்து வரும் திரைப்படம் “இராமாயணா”. பிரம்மாண்ட பொருட்செலவில்…

57 minutes ago

ஒட்டுத்துணியில்லாமல் கிடந்த இளம்பெண்… அதிகாலையில் ஷாக் : பரபரப்பு சம்பவம்!

வேலூர் மாவட்டத்தில் 23 வயது இளம்பெண் சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணியில் சேர்ந்தார். 6 மாதத்திற்கு பின்னர் வேலையை ராஜினாமா…

1 hour ago

LGBTQIA குறித்து சர்ச்சை கருத்து… வருத்தம் தெரிவித்த விசிக தலைவர் திருமாவளவன்..!!

LGBTQIA அமைப்பினர் குறித்து சர்ச்சை கருத்து கூறிய திருமாவளவன் வருத்தம் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12ஆம் தேதி கோவை வேளாண் பல்கலைக்…

3 hours ago

எங்களுக்காக ஒரு அணி உருவாக்கினார் விஜய்… தவெகவில் இணைந்த திருநங்கைகள் நெகிழ்ச்சி!

திருச்சி தெற்கு மாவட்ட தமிழக வெற்றிக் கழகம் சார்பாக கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் நடிகர் விஜயின் 51 வது…

3 hours ago

புதிய வரலாறு படைத்த இந்திய அணி… 2வது டெஸ்ட் போட்டியில் சாதனை!

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 2வது எடஸ்ட் போட் எட்ஜ்பாஸ்டனில் நடைபெற்றது. முதல் இன்னிங்ஸ் இந்திய அணி 587 ரன்கள்…

4 hours ago

This website uses cookies.