தீயில் பொசுங்கிய சொகுசு கார்.. நடுரோட்டில் திடீரென தீப்பிடித்த BMW கார் !!
சென்னை குரோம்பேட்டை ஜி.எஸ்.டி.சாலை பேருந்து நிலையத்தில் சிக்னல் அருகே சென்று கொண்டிருந்த பி.எம்.டபுள்யூ சொகுசு காரின் முன் பக்கத்திலிருந்து திடீரென புகை வரத் தொடங்கியது.
புகை வருவதை அறிந்த கார் ஓட்டுநர் காரை சாலையின் நடுவே நிறுத்திவிட்டு இறங்கி தப்பித்தார். உடனடியாக தாம்பரம் தீயணைப்பு துறை மற்றும் குரோம்பேட்டை காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இருந்தபோதும், கார் முற்றிலும் எரிந்து சேதமானது.
காரில் இருந்து வெளியேறிய புகை மண்டலம் அப்பகுதி முழுவதும் பரவியது.
விசாரணையில் குன்றத்தூரைச் சேர்ந்த பார்த்தசாரதி (22) காரை ஓட்டி வந்ததும், காரின் உரிமையாளர் அருண் பாலாஜி என்பதும் தெரியவந்தது.
மேலும், திருவல்லிகேணியில் இருந்து திண்டிவனம் நோக்கி செல்லும் போது குரோம்பேட்டையில் கார் தீவிபத்தில் சிக்கியது விசாரணையில் தெரியவந்தது.
கார் தீ விபத்தால் ஜி.எஸ்.டி. சாலையில் கடுமையான போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். போக்குவரத்து காவல்துறையினர் போக்குவரத்தை உடனடியாக சரி செய்தனர்.
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.