தவறாமல் அட்டெண்டன்ஸ் போடும் மாடு: குறிப்பிட்ட நேரத்திற்கு வந்து காத்திருக்கும் அதிசயம்: எதற்காக? யாருக்காக….!!

கரூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்நடைகள் (ஆடு, மாடுகள்) ஆங்காங்கே பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன.

இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள டெல்லி ஸ்வீட்ஸ் பேக்கரி என்ற தனியார் பேக்கரியில் தினந்தோறும் அதன் உரிமையாளரிடம் பிரட் மற்றும் பன் கேட்டு ஒரு பெரிய மாடு வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் 5 அடி நீளமுள்ள கருப்பு நிறமான கழுத்தில் கயிறு மட்டுமே கட்டியிருக்கும் மிகப்பெரிய மாடு டெல்லி ஸ்வீட் அண்ட் பேக்கரி உரிமையாளர் ரத்தினம் என்பவருக்காக நீண்ட நேரமாக வாசலிலே காத்துக்கொண்டிருக்கும்.

பின்னர் உரிமையாளர் வந்து மூன்று பிரட் பாக்கெட்டுகளையும் பன் வகைகளையும் ஊட்டி விடுவார்.

தேடி வரும் மாட்டுக்கு உணவளித்து அந்த மாட்டை அனுப்பி வைக்கும் இந்த செயல் கரூர் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அது மட்டுமல்லாமல் இந்த பேக்கரியின் நிறுவனரும், இவரது சகோதரருமான மறைந்த திரு.லட்சுமண பெருமாள் என்பவரிடமும் இதே மாடு,கன்று குட்டியாக இருக்கும் போதே, பிரட் சாப்பிட்டு செல்லுமாம்.மேலும் அவரும் இதே போல தான் ஊட்டி விடுவார் என்கின்றனர் அருகிலிருப்பவர்கள்.

உரிமையாளர் மட்டுமே தனக்கு உணவு தருவார் என்று காத்திருந்து பின்னர் சாப்பிட்டு செல்லும் இந்த மாட்டின் பாசப் போராட்டம் கரூர் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.