கரூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் கால்நடைகள் (ஆடு, மாடுகள்) ஆங்காங்கே பகல் மற்றும் இரவு நேரங்களில் சுற்றித் திரிகின்றன.
இந்நிலையில் கரூர் பேருந்து நிலையம் எதிரே உள்ள டெல்லி ஸ்வீட்ஸ் பேக்கரி என்ற தனியார் பேக்கரியில் தினந்தோறும் அதன் உரிமையாளரிடம் பிரட் மற்றும் பன் கேட்டு ஒரு பெரிய மாடு வரும் சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
சுமார் 5 அடி நீளமுள்ள கருப்பு நிறமான கழுத்தில் கயிறு மட்டுமே கட்டியிருக்கும் மிகப்பெரிய மாடு டெல்லி ஸ்வீட் அண்ட் பேக்கரி உரிமையாளர் ரத்தினம் என்பவருக்காக நீண்ட நேரமாக வாசலிலே காத்துக்கொண்டிருக்கும்.
பின்னர் உரிமையாளர் வந்து மூன்று பிரட் பாக்கெட்டுகளையும் பன் வகைகளையும் ஊட்டி விடுவார்.
தேடி வரும் மாட்டுக்கு உணவளித்து அந்த மாட்டை அனுப்பி வைக்கும் இந்த செயல் கரூர் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அது மட்டுமல்லாமல் இந்த பேக்கரியின் நிறுவனரும், இவரது சகோதரருமான மறைந்த திரு.லட்சுமண பெருமாள் என்பவரிடமும் இதே மாடு,கன்று குட்டியாக இருக்கும் போதே, பிரட் சாப்பிட்டு செல்லுமாம்.மேலும் அவரும் இதே போல தான் ஊட்டி விடுவார் என்கின்றனர் அருகிலிருப்பவர்கள்.
உரிமையாளர் மட்டுமே தனக்கு உணவு தருவார் என்று காத்திருந்து பின்னர் சாப்பிட்டு செல்லும் இந்த மாட்டின் பாசப் போராட்டம் கரூர் பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை ராமாபுரத்தில் மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டுமானப் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் கடந்த ஜூன் 12 ஆம் தேதி…
“தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கமல்ஹாசன் கூறிய நிலையில் அவர்…
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
This website uses cookies.