சிவகங்கை மாவட்டம் இளையான்குடி அருகே உள்ள வடக்கு ரிஷபனூரைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் டெல்லியில் ஆர்.எஸ்.எஸ்., நிர்வாகியாகவும், தேசிய லோக் அதாலத் கமிட்டி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று இரவு அவரது சொந்த வீட்டில் தங்கி இருந்த நிலையில், இன்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கேட்டில் மர்ம நபர்கள் சிலர் நாட்டு வெடி குண்டை வீசியுள்ளனர்.
ஆனால் அது வெடிக்காத நிலையில் வீட்டின் முன் பக்கம் கிடந்துள்ளது. வீட்டின் சன்னல் கண்ணாடிகளில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் வீட்டின் சுவற்றில் கருப்பு மையையும் மர்மநபர்கள் ஊற்றி சென்றுள்ளனர்.
வீட்டின் முன்புற கேட்டில் ஆங்காங்கே வி.சி.க., கட்சி கொடியையும் ஊன்றிவிட்டு சென்றுள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ராமசாமி இது குறித்து சாலை கிராமம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
இதையடுத்து போலீஸ் டி.எஸ்.பி.,சிபி சாய் சௌந்தர்யன்,சாலை கிராமம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா, இளையான்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபர்ட் ஜெயின் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நாட்டு வெடிகுண்டு வீசிய மர்மநபர்களை தேடி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ். நிர்வாகி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
நேஷனல் கிரஷ் இந்திய இளைஞர்களின் மத்தியில் நேஷனல் கிரஷ்ஷாக வலம் வருபவர் ராஷ்மிகா மந்தனா. இவரின் கியூட்டான ரியாக்சன்களுக்காகவே இவரை…
பத்ம பூஷன் அஜித்குமார் நேற்று ஜனாதிபதியின் கைகளால் இந்தியாவின் உயரிய விருதான பத்ம பூஷன் விருதை பெற்றார் அஜித்குமார். தனது…
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது X தளப்பதிவில், கள்ளச்சாராய ஆட்சிக்கு! கள்ளக்குறிச்சியே சாட்சி! சட்டம் ஒழுங்கு சீர்கேட்டிற்கு மாணவர்கள்…
STR 49 மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு இணைந்து நடித்த “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் 5 ஆம்…
நடிகர் அஜித்குமாருக்கு நேற்று பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டது. இது அஜித ரசிகர்கள் மட்டுமல்லாமல் உலகளவில் உள்ள தமிழர்களுக்கு பெருமை…
தமிழ் சினிமாவில் கதநாயாகியாக நடித்து பின்னர் வாய்ப்பு இல்லாமல் குடும்பம், குழந்தை என செட்டில் ஆன நடிகைதான் கஸ்தூரி. திருமணத்திற்கு…
This website uses cookies.