தமிழகம்

பல்லடத்தில் அடுத்தடுத்து அதிர்ச்சி.. தம்பதி சடலமாக மீட்பு!

திருப்பூர், பல்லடம் அருகே தம்பதி தங்களது வீட்டில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருப்பூர்: தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சிலம்பரசன் – அகிலாண்டேஸ்வரி தம்பதி. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன், கடந்த 4 ஆண்டுகளாக திருப்பூர் மாவட்டம், பல்லடம் அடுத்த சின்னக்கரை, லட்சுமி நகர் பகுதியில் வசித்து வந்தனர்.

சிலம்பரசன், அதே பகுதியில் கறிக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இந்த நிலையில், இன்று (டிச.10) காலை சிலம்பரசன் – அகிலாண்டேஸ்வரி தம்பதி இறந்து கிடப்பதாக, அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் பல்லடம் போலீசாருக்கு தகவல் அளித்து உள்ளனர். இந்தத் தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அப்போது, சிலம்பரசன் தற்கொலை செய்து கொண்டது போன்ற நிலையிலும், அகிலாண்டேஸ்வரி கழுத்து அறுக்கப்பட்ட நிலையிலும் சடலமாக கிடந்து உள்ளனர். பின்னர் இருவரது உடல்களையும் மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதனையடுத்து, இது கொலையா அல்லது தற்கொலையா, என்ன காரணம், அவர்களது குழந்தைகளின் நிலை என்ன என்பது உள்ளிட்ட கோணங்களில் போலீசார் விசாரணையைத் துரிதப்படுத்தி உள்ளனர். இந்தச் சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: சிதறிக் கிடந்த உடல்.. இளைஞர் கொடூர கொலை : போதையால் கொலை நகரமாகும் தலைநகராம்!!

காரணம், கடந்த 2 வாரங்களுக்கு முன்பு தான். பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, தாய் மற்றும் மகன் தங்களது தோட்டத்து வீட்டில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில், அதே பல்லடம் பகுதியில் தம்பதி வீட்டிலேயே சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

ஆஹா, இது செம கம்பேக்! சின்மயியை மீண்டும் தமிழ் சினிமாவிற்கு அழைத்து வந்த டி இமான்…

பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…

1 day ago

ராயப்பன் கேரக்டர் உண்மையிலேயே வாழ்ந்தவர்- யார் அந்த நபர்? சீக்ரெட்டை உடைத்த அட்லீ

டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…

1 day ago

நாச்சியப்பன் கடையில் பெயரை பொறித்து இனியும் மக்களை ஏமாற்ற முடியாது.. அண்ணாமலை சாடல்!

பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…

1 day ago

நல்ல வேளை இந்த பாட்டை படத்துல வைக்கலை, சுத்தமா செட் ஆகலை? “முத்தமழை” வீடியோ பாடலால் ரசிகர்கள் ஏமாற்றம்

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…

2 days ago

கழிவறையில் ரகசிய கேமரா… வீடியோ எடுத்து ஆசைக்கு இணங்க பெண் போலீசுக்கு மிரட்டல்..!!

கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…

2 days ago

இணையத்தில் டைட்டில் கசிந்ததால் படத்தின் பெயரையே மாற்றிய சூர்யா 45 இயக்குனர்? அடடா…

சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…

2 days ago

This website uses cookies.