தருமபுரி மாவட்டம் அரூர் நான்கு ரோடு அருகே உள்ள கரூர் வைசியா பேங்க் முன்பு உள்ள சாலையில் இருசக்கர வாகனம் மோதியதில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் சென்ற குழந்தை உட்பட மூன்று பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர்.
அரூர் ரவுண்டானாவில் இருந்து நான்கு ரோடு நோக்கி இரு சக்கர வாகனத்தில் ஜான் ராஜ் என்பவர் அவருடைய மனைவி மற்றும் 8 மாத குழந்தையுடன் 3 பேரும் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர். அப்போது சாலையில் இருசக்கர வாகனத்தில் ஒருவர் வாகனத்தை வளைக்க முற்பட்ட பொழுது அந்த வாகனம் எதிரே வந்த வாகனத்தை உரசியதில் மூவரும் தூக்கி வீசப்பட்டனர்.
அருகே இருந்த பொதுமக்கள் மூவரையும் மீட்டு அரூர் அரசு மருத்துவமனைக்கு விரைந்து கொண்டுசென்றதில் எட்டு மாத குழந்தைக்கு தலையில் அடிபட்டு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது.
கணவன் மனைவி இருவருக்கும் லேசான காயம் ஏற்பட்டு அதிர்ஷ்டவசமாக மூவரும் உயிர் தப்பினர். அடிக்கடி விபத்துக்கள் ஏற்படும் இந்த சாலையில் இரும்பு தடுப்புகளை அமைக்க வேண்டும் என போக்குவரத்து காவல்துறையினரிடம் பலமுறை இப்பகுதியைச் சேர்ந்த வணிகர்கள் பொதுமக்கள் வலியுறுத்தியும் இதுவரை போக்குவரத்து காவல்துறையினர் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே விபத்துக்கள் ஏற்படாத வகையில் இரும்பு தடுப்புகளை அமைத்து விபத்துக்களை தவிர்க்க வேண்டும் என வணிகர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.