கடந்த 2012 ஆம் ஆண்டு குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவரை அவரது கைரேகையை கொண்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு கைது செய்த மதுரை காவல்துறை.
மதுரை மாவட்டம், சிலைமான் காவல் நிலையத்திறகு உட்பட்ட அண்ணா நகர் கிராமத்தில் வசிக்கும் மலைசாமி என்பவர் கடந்த 2012 ஆம் ஆண்டு அளித்த புகாரின் அடிப்படையில் குற்றவாளியின் கைவிரல் ரேகை, சம்பவ இடத்தில் சேகரிக்கப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டது.
தற்போது கைவிரல் ரேகை குறித்த நவீன மென்பொருளான National Automated Finger Print Identification System – NAFIS காவல்துறையால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த மென்பொருளின் மூலம் கண்டுபிடிக்கப்படாமல் உள்ள பழைய வழக்குகளில் விரல் ரேகையை ஒப்பிட்டு பார்த்த போது, ராமநாதபுரம் கடலாடி காவல் நிலையத்தில் கடந்த 2022 ஆம் ஆண்டு பதியப்பட்ட வழக்கில் சேவுகராஜ் என்பவருடைய விரல் ரேகையுடன் ஒத்துப் போனது உறுதி செய்யப்பட்டது.
தற்போது முதுகுளத்தூர் கிளை சிறையில் நீதிமன்ற காவலில் உள்ள சேவுகராஜ், 2012 ஆம் ஆண்டு வழக்கின் அடிப்படையில் சம்பிரதாய கைது செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
திருட்டு போன பொருட்களை மீட்கும் முயற்சியை மதுரை மாவட்ட காவல்துறை மேற்கொண்டு வருகிறது.
பதிவான விரல் ரேகையின் அடிப்படையில் 11 ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற குற்ற சம்பவத்தின் அடிப்படையில் குற்றவாளியைக் கண்டுபிடித்த விரல் ரேகை வல்லுனர்களை மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவ பிரசாத் பாராட்டினார்.
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
காதல் திருமணம் செய்த ஜோடியை பிரிக்கும் நோக்கில் காதலனின் தம்பி என கூறப்படும் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் புரட்சி பாரதம்…
This website uses cookies.