கோவை செல்வபுரம் எல்.ஐ.சி காலனி பகுதியைச் சேர்ந்த 56 வயதுடைய காளிமுத்து. இவர் முன்னாள் மின்வாரிய ஊழியராக பணியாற்றியவர்.
இந்நிலையில் இன்று காலை தனது மனைவியிடம் நடைப்பயிற்சிக்கு செல்வதாக கூறிவிட்டு சென்றவர் வெகு நேரமாகியும் வராததால். அவரது மகன் ஆனந்தனுக்கு அவர் தாய் தொலைபேசியில் தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நண்பர்கள் மற்றும் உறவினர்களிடம் விசாரித்தனர். அப்பொழுது காளிமுத்து நண்பர் ஒருவர் ஆனந்தனை தொடர்பு கொண்டு அவரது தந்தை புட்டுவிக்கி சாலையில் உள்ள நொய்யல் ஆற்றில் நீரில் மூழ்கி இறந்து உள்ளதாக தகவல் தெரிவித்தார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தவர் அங்கு சென்று பார்த்தார். அவரது தந்தை இறந்து கிடந்தார். மேலும் இது குறித்து பேரூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை கனமழையாக பெய்து அப்பகுதியில் உள்ள நொய்யல் ஆறு நிரம்பி செல்கிறது. நீரில் மூழ்கி தான் உயிரிழந்தாரா ? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா ? என காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.