பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாவட்ட அளவில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் ஊனம் ஒரு குறையல்ல என்பதை நிரூபித்துக்காட்டிய பள்ளி மாணவன் .
திருப்பூர், மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டிகள் பள்ளிக்கல்வித்துறை சார்பில், நஞ்சப்பா மேல் நிலைப்பள்ளி உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
திருப்பூர், பல்லடம், உடுமலை காங்கேயம், அவினாசி, மடத்துக்குளம், ஊத்துக்குளி ஆகிய பகுதிகளை சேர்ந்த சுமார் 600 மாணவர்கள் கலந்துகொண்டனர்.
14,17,19 வயது பிரிவில் ஒற்றைக்கம்பு மற்றும் இரட்டைக்கம்பு சுற்றும் போட்டிகளும், வயதின் அடிப்படையில் எடைப்பிரிவில் தொடுமுறை போட்டிகளும் நடைபெற்றது.
போட்டிகளில் வெற்றிபெரும் மாணவர்கள் மாநில அளவில் 2023 ஆம் ஆண்டு ஜனவரி19 முதல் 22 வரை அரியலூர் மாவட்டத்தில் நடைபெறும் போட்டிகளில் கலந்துகொள்ள தகுதி பெறுவார்கள்.
இந்நிலையில் தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பப்போட்டிகள் புதிய விளையாட்டு போட்டிகளில் இடம் பெற்றுள்ளது.
இதனிடையே திருப்பூரில் நடைபெற்ற சிலம்பாட்ட போட்டியில் உடுமலைபேட்டையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பள்ளி மாணவன் சபரிநாதன் தனது ஒரு கையுடன் கைத்தேர்ந்த சிலம்பாட்ட வீரர்களை விட ஒற்றைக்கம்பு விளையாட்டில் சிலம்பத்தை அநாயசமாக சுற்றி பார்வையாளர்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.