கஞ்சா குடித்துவிட்டு தகராறில் ஈடுபட்டு வந்த தகப்பனை கத்தியால் குத்தி கொலை செய்த மகனை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே அகரம் பேரூராட்சி டி.அய்யம்பாளையம் என்ற கிராமத்தில் காளியப்பன்(63) என்பவர் அவர் மனைவி பாக்கியத்துடன் இதே கிராமத்தில் வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு நந்தினி (வயது 24), சரவணகுமார் (வயது 20), சிவா (வயது 17)ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர். இதில் நந்தினி திருமணம் முடிந்து அவரது கணவர் வீட்டில் வசித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து இரண்டு மகன்களுடன் காளியப்பன் அவரது மனைவியும் ஒரே வீட்டில் வசித்து வந்த நிலையில் காளியப்பன் கஞ்சா போதையில் அடிக்கடி கிராமத்தில் உள்ள பொதுமக்களிடம் தகராறு செய்து வந்துள்ளார்.
இதைத் தொடர்ந்து இன்று வழக்கம் போல் அவர் கஞ்சா போதையில் அவரது மனைவி பாக்கியம் மற்றும் மகன்களை ஆபாச வார்த்தைகளால் பேசி தாக்கம் முயன்றுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சரவணக்குமார் கத்தியால் தனது தந்தையை சரமாரியாக குத்தியதில் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலே பலியானார்
தகவல் அறிந்து விரைந்து வந்த வேடசந்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் துர்கா தேவி தலைமையிலான போலீசார் சரவணக்குமாரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.