Categories: தமிழகம்

கோவையில் பிரபல தனியார் பள்ளியில் மாணவிக்கு பாலியல் சீண்டல்.. LIBRARIAN வெறிச்செயல்.. மூடி மறைத்த பள்ளி நிர்வாகம்!

கோவை வடவள்ளியை அடுத்த ஒரு கிராமத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. இந்தப் பள்ளியில் 800 – க்கும் மேற்பட்ட மாணவ – மாணவிகள் படித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் அந்த பள்ளியில் 9 – ம் வகுப்பு படிக்கும் மாணவிக்கு நூலக பொறுப்பாளராக பணி புரிந்த நபர் பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார்.

அந்த நபரின் பாலியல் தொல்லை அதிகரிக்கவே மாணவி, தனது பெற்றோரிடம் தெரிவித்து உள்ளார். அதிர்ச்சி அடைந்து நடந்த விவரங்களை மாணவி படிக்கும் வகுப்பு ஆசிரியை ஒருவரிடம் பெற்றோரிடம் தெரிவித்து உள்ளனர்.

இந்த விவகாரம் தனியார் பள்ளிகளின் நிர்வாகப் பொறுப்பில் இருக்கும் அதிகாரி ஒருவரின் கவனத்துக்குச் சென்று உள்ளது. அவர் பள்ளிக்கு நேரில் சென்று விசாரித்து உள்ளார்.

சம்பவம் தொடர்பாக தனக்கு அறிக்கை அளிக்கும்படி அவர் பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு உள்ளார். இந்தநிலையில் நூலக பொறுப்பாளர் திடீரென ராஜினாமா செய்து வேலையை விட்டு நின்று விட்டார்.

பள்ளி நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் அவர் வேலையை விட்டு நின்றதாக கூறப்பட்டது. தற்போது இந்த விவகாரம் வெளியே கசிய தொடங்கி பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதுபோல் மாணவிகளுக்கு உடனடியாக பாலியல் தொல்லை ஏற்பட்டால் போலீசில் புகார் செய்ய வேண்டும் என அனைத்து பள்ளிக்கும் போலீசாருக்கும் உத்தரவிட்டு உள்ளனர். ஆனால் அவ்வாறு புகார் செய்யாமல் அந்த பள்ளி நிர்வாகம் அதனை மூடி மறைக்க முயல்வதாக பெற்றோர் குற்றம் சாட்டி உள்ளனர்.

மேலும் மாவட்ட பள்ளி கல்வி அதிகாரிகளுக்கும் அவர்கள் தகவல் தெரிவிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தி நூலக பொறுப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அதே பள்ளியில் படித்த மாணவி ஒருவர் பள்ளி வேனில் வந்து சென்று உள்ளார். அந்த மாணவிக்கும் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அப்போதும் பிரச்சினை மூடி மறைக்கப்பட்டு உள்ளது.

எனவே தற்போது எழுந்து உள்ள பிரச்சினையிலாவது போலீசார் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர் வலியுறுத்தி உள்ளனர். மாவட்ட குழந்தைகள் நல வாரிய அதிகாரிகள் தற்பொழுது ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

10 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

11 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

12 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

13 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

13 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

14 hours ago

This website uses cookies.