சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் டொக்கன் ராஜா. இவர் பிரபல ரெளடியான சி.டி மணியின் கூட்டாளி. இவர்மீது கொலை மற்றும் கொலை முயற்சி, ஆள் கடத்தல், கட்டப்பஞ்சாயத்து என 25-க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், மயிலாப்பூர் பல்லாக்கு நகர்ப் பகுதியில், 9-ம் தேதி இரவு ரௌடி டொக்கன் ராஜாவை மர்மக்கும்பல் ஒன்று வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தது. இந்தச் சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சம்பவம் குறித்து வழக்கு பதிவுசெய்த மயிலாப்பூர் போலீஸார், தீவிர விசாரணை மேற்கொண்டுவந்தனர்.
முதற்கட்ட விசாரணையில், முன்விரோதம் காரணமாகவே, டொக்கன் ராஜாவை மர்மக்கும்பல் வெட்டிக் கொலைசெய்திருப்பது தெரியவந்தது. அதன்படி, தனிப்படை அமைத்த போலீஸார், கொலையாளிகளைத் தேடிவந்தனர்.
இந்த நிலையில், ரௌடி டொக்கன் ராஜா கொலை வழக்கில் தொடர்புடையதாக, ஆவடி அவுசிங் போர்டு பகுதியைச் சேர்ந்த சபரிநாத், ராஜேஷ், திருநின்றவூரைச் சேர்ந்த மனோஜ்குமார், துரைபாக்கத்தைச் சேர்ந்த நரேஷ்குமார் ஆகிய நான்கு பேர் இன்று திண்டிவனம் முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைய வந்தனர்.
ஆனால், அவர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுக்கள் சரியாக இல்லாததால், சரணடைவதற்கான விண்ணப்பத்தை நீதிபதி ஏற்றுக்கொள்ளவில்லையாம்.
இதையடுத்து, நான்கு போரையும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் சென்ற திண்டிவனம் போலீஸார், அவர்களை சென்னை, மயிலாப்பூர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
This website uses cookies.