ஸ்கூட்டி மீது மோதிய கார்… 100 அடி தூரம் இழுத்து சென்ற விவசாயி : நெஞ்சை பதற வைத்த விபத்தின் பகீர் காட்சி!!
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே சிவன்மலையில் ஸ்கூட்டி மீது அதிவேகமாக சென்ற கார் மோதி விவசாயி உயிரிழந்த சம்பவத்தில் விபத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
திருப்பூர் மாவட்டம், காங்கேயம் அருகே உள்ள கீரனூர் பகுதியை சேர்ந்தவர் தங்கமுத்து (60). விவசாயியான இவர் நேற்று காங்கேயத்தில் மாட்டு தீவனம் வாங்கி கொண்டு ஸ்கூட்டியில் வீடு திரும்பினார். அப்போது சிவன்மலை பகுதியில் சென்ற போது அதிவேகமாக வந்த கார் மோதியதில் உயிரிழந்தார்.
இந்நிலையில் விபத்து நிகழ்ந்த இடத்தில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமிராவில் விபத்து சம்பவம் பதிவாகி தற்போது காங்கேயம் பகுதி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அதில் ஸ்கூட்டியில் செல்லும் விவசாயி மீது பின்னால் அதிவேகத்தில் வந்த கார் மோதுவதும், பின்னர் சுமார் 100 அடி தூரத்திற்கு விவசாயி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.