திருச்சி அருகே விவசாயி வெட்டிக்கொலை செய்யப்பட்ட நிலையில்- உடலை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தினர்.
திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தாத்தையங்கார் பேட்டை அடுத்த கொழிஞ்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் தண்டன் மகன் செல்லத்துரை (50).
இவர் மனநிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று கடந்த 10 மாதங்களுக்கு முன்பு ஊருக்கு வந்தவர். தனது மனநிலை பாதித்த சூழ்நிலையில் பல்வேறு நபர்களிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் செல்லத்துரை அவ்வழியாக வந்த கொழிஞ்சிப்பட்டியை சேர்ந்த பிச்சை மகன் துரைராஜ் (வயது 65) என்பவரை அரிவாளால் வெட்டியுள்ளார். அப்போது செல்லதுரையின் விரல்களும் வெட்டுப்பட்டது.
இதில் பலத்த காயமடைந்த துரைராஜ் சம்பவ இடத்தில் உயிரிழந்தார். இதில் கொலை சம்பவத்தில் ஈடுப்பட்ட செல்லதுரையும் இறந்து கிடந்த துரைராஜ் அருகிலேயே மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் தா. பேட்டை காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவல் அறிந்த தாபட்டை காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று துரைராஜ் சடலத்தை மீட்டு துறையூர் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், சம்பவம் தொடர்பாக வழக்கு பதிந்து செல்லத்துரையை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் தா. பேட்டை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.