Categories: தமிழகம்

திடீர் தற்கொலை செய்த தந்தை… வீட்டில் தனியாக இருந்த கல்லூரி மாணவி : நடந்த விபரீத சம்பவம்!!

சென்னை செங்குன்றம் அடுத்த பாடியநல்லூர் திருப்பூர் குமரன் தெருவை சேர்ந்தவர் சரவணன். இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு குடும்ப சுமை மற்றும் பிரச்சனை காரணமாகவும் மேலும் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்டார்.

தனது தந்தையின் நினைவாகவே இருந்து வந்த கல்லூரி மாணவி கீர்த்தி தனது அம்மாவுடன் அதே வீட்டில் வசித்து வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் கீர்த்தி சென்னை மாதவரத்தில் உள்ள அகர்சன் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு கிரிமினாலஜி படித்து வந்த நிலையில் வழக்கம்போல் இன்று காலை கீர்த்தியின் அம்மா தனியார் நிறுவனத்தில் வேலைக்குச் சென்று விட கீர்த்தி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.

தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த கீர்த்தி யாரிடமும் சரிவர பேசவில்லை என கூறப்படுகிறது. இதனை அடுத்து வீட்டில் இருந்த மின்விசிறியில் புடவைகளை கொண்டு தனக்குத்தானே தூக்கிட்டு தொங்கிய நிலையில் இறந்த நிலையில் கிடந்துள்ளார்.

இதனை அடுத்து இவரை வழக்கமாக கல்லூரிக்கு அழைத்துச் செல்லும் இவரது ஆண் நண்பர் சாம் குமார் என்பவர் இன்று வந்து பார்த்தபோது கீர்த்தி வீட்டில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக அருகில் இருந்தவர்களை துணைக் கொண்டு பாடியநல்லூர் ரீலா என்கின்ற தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவரை மருத்துவர்களிடம் காண்பித்துள்ளனர்.

அவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தகவல் அளிக்க இதனை அடுத்து இது குறித்து சென்னை செங்குன்றம் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டு தகவலை அடுத்து தனியார் மருத்துவமனைக்கு விரைந்து வந்த செங்குன்றம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குடும்ப பிரச்சனையில் தந்தை இறந்த சோகத்தில் இளம் பெண் தூக்கிட்டு உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

இனி திமுகவின் பண பலம், அதிகார பலம் எடுபடாது… 234 தொகுதியிலும் அதிமுகதான் : முன்னாள் அமைச்சர் உறுதி!

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…

9 hours ago

ஆடியன்ஸ் மேல ஏன் பழி போடுறீங்க? பாட்டு வைக்காதது யார் தப்பு?- மணிரத்னத்தை கண்டபடி கேட்ட பிரபலம்…

சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…

9 hours ago

முதலமைச்சர் போட்ட டெல்டாக்காரன் வேஷம் பல் இளிக்கிறது அண்ணாமலை விமர்சனம்!

தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…

9 hours ago

அஜித்தின் அடுத்த படம்! தனது சம்பளத்தை எக்குத்தப்பாக ஏற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்? அடேங்கப்பா!

ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…

10 hours ago

மீசையை முருக்கி பேசுவேன் என திருமா கூறியுள்ளார்.. அதற்காக காத்திருக்கிறோம் : அண்ணாமலை!

திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…

10 hours ago

முதல் திருமணத்தை மறைத்து பல லட்ச ரூபாய் மோசடி!  “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” நடிகையின் கைவரிசை?

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர்  “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…

11 hours ago

This website uses cookies.