Categories: தமிழகம்

விடுப்பில் சென்ற பெண் காவலர் வீட்டில் கழுத்தறுத்து கொலை… சாட்சியாக வந்த 5 வயது குழந்தை : குமரியில் ஷாக்!

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே குளப்புறம் பகுதியை சேர்ந்தவர் மினி 42, தமிழக காவல்துறையில் கடந்த 2003ம் ஆண்டு பணியில் சேர்ந்த இவருக்கு திருமணமாகி 5 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது

பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த இவர் கடந்த 2021ம் ஆண்டு மார்த்தாண்டம் அனைத்து மகளீர் காவல்நிலையத்தில் பணிபுரிந்து கொண்டிருந்த போது மனநோயால் பாதிக்கப்பட்டு இதுநாள் வரை விடுப்பில் இருந்து வந்துள்ளார்.

இவரது கணவரும் மனநோய் பாதிக்கப்பட்டு வேலைக்கு ஏதும் செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளார் இந்த நிலையில் இன்று காலை தூக்கத்தில் இருந்து எழும்பிய 5 வயது குழந்தை தாயார் கழுத்து அறுக்கப்பட்டு இரத்த வெள்ளத்தில் கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள வீட்டில் உள்ளவர்களிடம் அழுதபடி போய் கூறி உள்ளார்.

இதனை கேட்ட அக்கம்பகத்தினர் ஓடி வந்து பார்த்து 108 ஆம்புலன்ஸ்க்கு அழைத்து உள்ளனர் தகவலறிந்து வந்த 108 ஆம்புலன்ஸ் செவிலியர் காவலர் மினியை பரிசோதித்து பார்த்தபோது அவர் இறந்து விட்டதாக தெரிவித்து விட்டு களியக்காவிளை போலீசாருக்கு தகவல் தெரிவித்து விட்டு திரும்ப சென்றுள்ளார்

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விசாரணை நடத்தினர் அந்த நேரத்தில் இறந்த பெண் காவலரின் கணவர் வீட்டின் ஒரு ஓரத்தில் பிரம்மை பிடித்தது போல் இருப்பதை கண்டு சந்தேகமடைந்து கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாயை வரவழைத்து விசாரணை நடத்தினர்.

அப்போது அந்த மோப்ப நாய் வேறெங்கும் செல்லாமல் வீட்டை சுற்றியபடியே சிறிது நேரம் நின்றது அதே நேரத்தில் அவரது கணவரிடம் அந்த மோப்ப நாய் செல்லவில்லை இதனையடுத்து போலீசார் உயிரிழந்த பெண் காவலரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துவிட்டு வீட்டில் இருக்கும் கணவரை போலீஸ் கண்காணிப்பில் வைத்துள்ளனர் மேலும் இறப்புக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மனநோய் பாதிப்புக்குள்ளாகி விடுப்பில் இருந்த பெண் காவலர் மர்மமான முறையில் கழுத்து அறுக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

9 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

10 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

11 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

11 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

12 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

12 hours ago

This website uses cookies.