விழுப்புரம் : ரத்த புற்று நோயால் இறந்த நண்பனின் நினைவு தினத்தை ஒட்டி ரத்ததானம் அளித்த நண்பர்கள் மற்றும் கிராம மக்களின் செயல் நெகிழ்ச்சியய் ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் அருகே உள்ள ஒட்டன் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்த மின்சார துறையில் லைன் மேன் ஆக பணியாற்றி வரும் பழனி என்பவர் மகன் ராஜகுரு.
இவர் சென்ற ஆண்டு ரத்தப் புற்றுநோய் காரணமாக உயிரிழந்தார். இந்நிலையில் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி ராஜ குருவின் நண்பர்கள் மற்றும் கிராம மக்கள் 50 கும் மேற்பட்டோர் விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ரத்த சேகரிப்பு மையத்தில் ரத்ததானம் அளித்தனர்.
இதற்காக மருத்துவமனை சார்பில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கூடுதலாக நியமிக்கப்பட்டு ரத்த தானம் செய்ய வந்தவர்களிடமிருந்து ரத்தங்கள் பெறப்பட்டது.
பின்னர் பேசிய கிராம இளைஞர்கள் இது போலவே அனைவரும் நினைவு தினத்திற்கு ரத்த தானம் செய்வதால் அவரின் ஆன்மாவும் சாந்தி அடையும் எண்ணற்ற உயிர் காப்பாற்ற முடியும் என தெரிவித்தனர்.
ஒருவர் இறந்த பின் அடுத்த நாளே மறக்கும் இந்த காலகட்டத்தில் நண்பரின் நினைவு தினத்தை மற்றவர்களுக்கு உபயோகமாக ரத்த தானம் செய்ய இளைஞர்கள் வந்தாலும் ஒட்டன் காடுவெட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்களும் இவர்களுடன் வந்து ரத்த தானம் அளித்தது நெகிழ்ச்சியய் ஏற்படுத்தியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.