விழுப்புரம் அருகே சினிமா பட பாணியில் ஓடும் பேருந்தில் பெண்ணிடம் தங்க தாலியை பறித்துக் கொண்டு மாற்று பேருந்தில் ஏறி தப்பிக்க முயன்ற 5 பேர் கைது.
சென்னையில் இருந்து விழுப்புரம் வந்த அரசு பேருந்து திண்டிவனம் பேருந்து நிலையத்தில் நின்றது. அப்போது அரசு பேருந்தில் ஏறிய ஒரு பெண் விழுப்புரம் நோக்கி பயணம் செய்தார்.
அப்போது பேருந்தில் பயணம் செய்த ஐந்து பேர் கொண்ட கும்பல் விக்கிரவாண்டி டோல்கேட் அருகே வந்தபோது பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த தங்க தாலியை அறுத்து விட்டு மாற்று பேருந்தில் தப்பி சென்ற போது அந்தப் பெண் அலறல் சத்தம் கேட்டு விக்கிரவாண்டி டோல்கேட் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் குற்றவாளிகள் தப்பிச்சென்ற அந்த பேருந்தை விரட்டிச் சென்று மடக்கி ஐந்து பேரை பிடித்தனர்.
அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள் திருச்சியை சேர்ந்த பாண்டியன், யோகராஜ், பாலு, பிரதாப், கண்ணதாசன் என்பது தெரியவந்தது.
உடனடியாக கைது செய்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டார்கள். வழக்கு பதிவு செய்த விக்கிரவாண்டி காவல்துறையினர் ஐந்து பேரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சினிமா பட பாணியில் ஓடும் பேருந்தில் செயினை அறுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
யுவன் ஷங்கர் ராஜா இளையராஜாவின் இளைய மகனான யுவன் ஷங்கர் ராஜா, “அரவிந்தன்” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர். தனது…
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
This website uses cookies.